உலகின் பெரிய விமான போக்குவரத்து சந்தையில் இந்தியா 5வது இடம்!

புதுடில்லி: உலகின் 5வது பெரிய விமான போக்குவரத்து சந்தையாக இந்தியா உயர்ந்துள்ளது என, ஐஏடிஏ எனப்படும் பன்னாட்டு விமானப் போக்குவரத்து அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
350 விமான நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச விமான நிலைய போக்குவரத்து அமைப்பு , 2024ம் ஆண்டிற்கான உலக விமானப் போக்குவரத்து புள்ளிவிவரங்களின் சமீபத்திய அறிக்கையை இன்று வெளியிட்டது.
அதில் கூறி இருப்பதாவது:
மும்பை-டில்லி விமானச் சேவை 2024-ல் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலைய வழித்தடமாக இடம்பிடித்துள்ளது.
கடந்த ஆண்டு இந்தியா 21 கோடியே 10 லட்சம் விமானப் பயணிகளைக் கண்டது. இது 2023 உடன் ஒப்பிடும்போது 11.1 சதவீத வளர்ச்சியுடன் 20 கோடியே 10 லட்சம் பயணிகளைக் கையாண்ட ஜப்பானை முந்தி உள்ளது.
"உள்நாட்டு சந்தையின் வலிமையின் அடிப்படையில், 2024ம் ஆண்டில் 87 கோடியே 6 லட்சம் பயணிகளுடன் உலகின் மிகப்பெரிய விமானச் சந்தையாக அமெரிக்கா உள்ளது, இது ஆண்டுக்கு ஆண்டு 5.2 சதவீதம் வளர்ச்சியடைகிறது.
"சீனா 74 கோடியே 10 லட்சம் பயணிகளுடன் இரண்டாவது பெரிய பயணிகள் சந்தையாக இருந்தது. இது 2023 உடன் ஒப்பிடும்போது 18.7 சதவீதம் வளர்ச்சியாகும்.
இங்கிலாந்து 3வது இடத்தில் (26 கோடி 10 லட்சம் பயணிகள்) மற்றும் ஸ்பெயின் 4வது இடத்தில் (24 கோடியே 10லட்சம்) உள்ளன.
முதல் 10 விமான நிலைய வழித்தடங்களில், மும்பை-டில்லி 2024ல் 59 லட்சம் பயணிகளைக் கொண்டு 7வது பரபரப்பான விமான நிலைய வழித்தடமாக இருந்தது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் மிரட்டல் நியாயமற்றது என மத்திய அரசு பதிலடி டிரம்புக்கு இந்தியா பதிலடி
-
வர்த்தக துளி
-
அமெரிக்காவுக்கு முட்டை ஏற்றுமதி நிறுத்தம்
-
மத்திய அரசின் நிதி சார் திட்ட முகாம்கள் 30 நாளில் 5.33 லட்சம் விண்ணப்பங்கள்
-
கொடிசியாவில் அக்டோபரில் 'ஸ்டார்ட்அப்' மாநாடு
-
கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்த்து புத்தொழில் துவங்க விரும்பினால் உதவி தமிழக அரசின் 'நெக்ஸ்ட் லீப்' திட்டம்