தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துகின்றனர்: சென்னை ஐகோர்ட் காட்டம்

சென்னை;தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துவதாக சென்னை ஐகோர்ட் கண்டித்துள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு சாகித்ய அகாடமி போன்ற உயரிய இலக்கிய விருது பெற்ற எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு (இவர் ஒரு எழுத்தாளரும் கூட) வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பின்னர், அந்த ஒதுக்கீட்டை ரத்து செய்தது. மேலும் அதன் பிறகு தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்ப்பு திலகவதி, மறைமலை இலக்குவனார் ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அதன் பேரில் வீடு ஒதுக்கீடு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில், தமக்கும் வீடு வேண்டும் என்ற கோரிக்கையுடன் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட இருவர் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருந்தனர். இம்மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்ய ஐகோர்ட் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து, அரசு தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டதாக வைரமுத்து தரப்பில் வாதிடப்பட்டது.
இதைக் கேட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியதாவது;
இது ஐஏஎஸ் அதிகாரிகள் செயலாகும். ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கத்தை நடத்தி வருகின்றனர். இது துரதிருஷ்டவசமானது. எழுத்தாளர்களுக்கு விடு ஒதுக்கீடு செய்வது என்பது உணர்வுப்பூர்வமான விஷயம். இது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தெரியாது.
அவர்கள் (ஐஏஎஸ் அதிகாரிகள்) அதிகார தொனியில் தான் பேசுவார்கள். கருணாநிதி இருந்திருந்தால் இதை அனுமதித்தே இருக்க மாட்டார். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை இணை அரசாங்கம் நடத்த அனுமதித்தால் அது பெரும் சிக்கலை ஏற்படுத்தி விடும் என்று தெரிவித்தார்.

மேலும்
-
திமுக உருவாக்கிய அரசியல் கலாசாரம்: அண்ணாமலை சாடல்
-
செந்தில்பாலாஜி தம்பி அமெரிக்கா செல்ல அனுமதி!
-
இந்தியா யாருக்கும் அடிபணியாது; வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்
-
ஆட்சியின் கடைசி ஆண்டில் குறளி வித்தை காட்டும் திமுக அரசு; அண்ணாமலை விளாசல்
-
ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் பேச்சு : இந்தியா வர அழைப்பு
-
விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கான வழிகாட்டுதல்கள்; தமிழக அரசு வெளியீடு