மாணவர்கள் அறிமுக விழா

சாத்துார்: கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான அறிமுக விழா புதிய பொறியியல் துறை வளர்ச்சி குறித்த விழிப் புணர்வு விழா நடந்தது.

காரைக்குடி இந்திய அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் முதன்மை விஞ்ஞானி ரகுபதி தலைமை வகித்தார். முதல்வர் காளிதாச முருகவேல் வரவேற்றார்.

முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர் களுக்கு சமீபத்திய பொறியியல் துறையில் தொழில் நுட்ப வளர்ச்சி அறிவியல் கண்டுபிடிப்புகள், அவற்றின் தாக்கங்கள் குறித்து அறிமுகம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாண வர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement