விளையாடிய மாணவர் தலையில் பாய்ந்தது ஈட்டி
கம்பம்: தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி தனியார் மேல்நிலைப்பள்ளியில், ஈட்டி எறிதல் பயிற்சியின் போது, ஒன்பதாம் வகுப்பு மாணவரின் தலையில் ஈட்டி பாய்ந்தது.
ராயப்பன்பட்டியில் உள்ள தனியார் மேல் நிலைப்பள்ளி விடுதியில் தங்கி, கோம்பையை சேர்ந்த சந்திரன் மகன் சாய்பிரகாஷ், 13, என்பவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் மாலை, பள்ளி மைதானத்தில், சக மாணவர்களுடன் கால்பந்து விளையாடினார்.
மைதானத்தின் மற்றொரு பகுதியில், கூடலுார் சரவணன் மகன் தீதேஷ், 21, என்பவர், கல்லுாரி மாணவர்களை அழைத்து வந்து, ஈட்டி எறிதல் பயிற்சி அளித்தார்.
பயிற்சியின் போது, தீதேஷ் ஈட்டி எறிந்து காண்பித்த போது, தவறுதலாக மாணவர் சாய் பிரகாஷின் பின் தலையில் பாய்ந்தது.
பலத்த காயடைந்த மாணவரை அங்கிருந்தவர்கள், தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். ராயப்பன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
செல்வாக்கை பயன்படுத்துங்கள், உக்ரைன் போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் கூறுங்கள்: சொல்கிறது அமெரிக்கா
-
மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில மாநாடு துவக்கம்
-
தங்கத்தின் விலையில் மீண்டும் இன்று மாற்றம்: சவரன் ரூ.200 குறைவு
-
கை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்; தானம் செய்தவரின் சகோதரருக்கு ராக்கி கட்டிய நெகிழ்ச்சி சம்பவம்!
-
9வது நாளை எட்டிய ஆப்பரேஷன் அகல்; பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணம்
-
நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் நாசா: 2030க்குள் முடிக்க திட்டம்