ஆறு மாதங்களாக ஊதியம் இல்லை பதிவுத்துறை ஒப்பந்த பணியாளர்கள் புகார்
சென்னை: சார் பதிவாளர் அலுவலகங்களில் கணினி மற்றும் கேமரா ஆப்பரேட்டர்களுக்கு ஒப்பந்த நிறுவனங்களிடம் இருந்து ஆறு மாதங்களாக ஊதியம் வரவில்லை என புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் 585 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. இதில் கணினி இயக்குதல் கேமராக்கள் இயக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இதற்காக மாதம் 8000 ரூபாய் வரை ஊதியம் பேசப்பட்டது.
இதற்கான செலவுத் தொகையை பதிவுத்துறை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்களுக்கு கொடுத்து விடுகிறது. ஆனால் ஒப்பந்த நிறுவனங்கள் அந்தந்த மாதத்துக்கான ஊதியத்தை உரிய காலத்தில் வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதேபோன்று புகார் எழுந்தபோது ஒப்பந்த நிறுவனங்களை அழைத்து, அப்போது இருந்த ஐ.ஜி., பேசினார்.
இதையடுத்து ஒப்பந்த நிறுவனங்கள் பணியாளர்களுக்கான நிலுவை ஊதியத்தை கொடுக்க முன்வந்தன. இதேபோன்று ஒப்பந்த நிறுவனங்களை அழைத்து பேசி நிலுவை ஊதியம் கிடைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணியாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
மேலும்
-
9வது நாளை எட்டிய ஆப்பரேஷன் அகல்; பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் 2 பேர் வீர மரணம்
-
நிலவில் அணுமின் நிலையம் அமைக்கும் நாசா: 2030க்குள் முடிக்க திட்டம்
-
அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச் சூடு: போலீஸ் அதிகாரி, சந்தேக நபர் உயிரிழப்பு
-
தலைநகர் டில்லியை புரட்டி போடும் கனமழை; 100 விமானங்கள் தாமதம், ரெட் அலர்ட் அறிவிப்பு
-
உலக பள்ளி கைப்பந்து போட்டி தேர்வு
-
பெண் கவுன்சிலர்கள் பேச வாய்ப்பு மறுப்பு நகர்மன்ற கூட்டத்தில் குற்றச்சாட்டு