5.2 கிலோ எடையில் பிறந்த 'பிள்ளையார்' குழந்தை: மருத்துவர்கள் ஆச்சரியம்

ஜபல்பூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் 5.2 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு; ஜபல்பூரைச் சேர்ந்தவர் சுபாங்கி யாதவ். கர்ப்பிணியான இவர், பிரசவத்துக்காக அதே பகுதியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிசேரியன் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 5.2 கிலோ ஆக இருந்ததை கண்டு மருத்துவமனை நிர்வாகமே ஆச்சரியம் அடைந்தது.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது;
வழக்கமாக ஆண் குழந்தை எனில், அதிகபட்சம் 3.2 எடை என்ற அளவில் தான் பிறக்கும். இந்த மருத்துவமனையிலும் அப்படித்தான் இதுவரை நிகழ்ந்துள்ளது. ஆனால் முதல் முறையாக, 5.2 கிலோ எடையில் ஆரோக்கியமாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது ஆச்சரியமே.
கர்ப்பகாலத்தில் அந்த பெண், எடுத்துக் கொண்ட உணவுமுறைகளே குழந்தையின் எடை 5.2 ஆக அதிகரிக்க காரணமாக இருக்கலாம். சிசேரியன் ஆபரேஷன் எங்களுக்கு சவாலாக இருந்தது. குழந்தையும், தாயும் நலமாக உள்ளனர்.
இவ்வாறு மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.
எங்கள் வீட்டுக்கு விநாயகரே பிறந்துள்ளார் என்று குழந்தையின் தாய் சுபாங்கி யாதவும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதிக எடையில் குழந்தை பிறந்துள்ளதால் இருவரையும் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.


மேலும்
-
இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும்; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி
-
திருப்பதி அருகே விண்வெளி நகரம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
-
தாய்லாந்து புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல் தேர்வு
-
ஆசிரியர் தினத்தில் தேர்தல் வாக்குறுதி எண்-181 ஞாபகம் வருகிறதா; முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
மணல் கடத்தலை தடுத்த பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு மிரட்டல்: அஜித் பவார் விளக்கம்
-
ரஷ்ய கச்சா எண்ணெய் விவகாரம்; டிரம்ப் ஆலோசகர் கருத்துக்கு இந்தியா பதிலடி