சிறந்த துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இருப்பார்: பிரதமர் மோடி

புதுடில்லி: தேஜ கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன், சிறந்த துணை ஜனாதிபதியாக இருப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.




இந்த கூட்டத்துக்கு பிறகு பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: டில்லியில் நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்தில் பங்கேற்றேன். இதில் தேஜ கூட்டணி குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்றனர். துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி. ராதா கிருஷ்ணன் அனைவரிடமும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளார். அவர் சிறந்த துணை ஜனாதிபதியாக இருப்பார் என்றும், தனது அறிவு மற்றும் நுண்ணறிவால் துணை ஜனாதிபதி பதவியை வளப்படுத்துவார் என்றும் மக்கள் நம்புகிறார்கள். இவவாறு அவர் கூறியுள்ளார்.
@twitter@https://x.com/narendramodi/status/1965077542584422593 twitter
இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாக வெளியான தகவலில் கூறப்பட்டு உள்ளதாவது: உள்நாட்டு பொருட்களை ஊக்குவிக்க தேசிய ஜனநாயக எம்பிக்கள், 'சுதேசி மேளா'விற்கு ஏற்பாடு செய்ய வேண்டும். ஜிஎஸ்டி மறுசீரமைப்பு தொடர்பாக வர்த்தகர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும். மத்திய அரசு எடுத்த ஜிஎஸ்டி குறைப்பு மூலம் ஒரு அலை உருவாகி உள்ளது. இதனை கூட்டங்கள் நடத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மேட் இன் இந்தியா தயாரிப்பை ஊக்கப்படுத்த எம்பிக்கள் தங்களது தொகுதிகளில் சிறப்பு கண்காட்சியை நடத்த வேண்டும். துணை ஜனாதிபதி தேர்தலில் எம்பிக்கள் அனைவரும் தங்களது ஓட்டை சரியான முறையில் பதிவு செய்துள்ளதை உறுதிப்படுத்த வேண்டும். ஒரு ஓட்டும் வீணாகக்கூடாது. இவ்வாறு பிரதமர் மோடி பேசியதாக அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (7)
venugopal s - ,
09 செப்,2025 - 20:36 Report Abuse

0
0
Reply
V Venkatachalam - Chennai,இந்தியா
09 செப்,2025 - 16:15 Report Abuse

0
0
Reply
Tamilan - ,இந்தியா
09 செப்,2025 - 08:58 Report Abuse

0
0
Reply
pmsamy - ,
09 செப்,2025 - 06:52 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
09 செப்,2025 - 05:40 Report Abuse

0
0
Reply
Kasimani Baskaran - Singapore,இந்தியா
09 செப்,2025 - 04:09 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
09 செப்,2025 - 00:20 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பாதுகாப்பு விதிமுறைகளை மீறுகிறார் ராகுல்: சிஆர்பிஎப் புகார்
-
நிஜ ரமணாக்கள்
-
கிளம்பும் நேரத்தில் ஏற்பட்ட பிரச்னை: புறப்பட்ட இடத்துக்கு திரும்பிய ஸ்பைஸ்ஜெட் விமானம்
-
' அமெரிக்கா செய்ததையே செய்தோம்': கத்தார் மீதான தாக்குதலை நியாயப்படுத்துகிறார் இஸ்ரேல் பிரதமர்
-
கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள்: காணிக்கை வழங்கிய இளையராஜா
-
அவரவர் நாட்டு கரன்சி அடிப்படையில் வர்த்தகம்; இந்தியா, மொரீஷியஸ் முடிவு
Advertisement
Advertisement