80 வயது மூதாட்டியை குடும்பத்துடன் இணைத்து வைத்த காவல் கரங்கள்

சென்னை: மடுவாங்கரை பகுதியில் ஆதரவற்ற நிலையில் சுற்றி திரிந்த, 80 வயது மூதாட்டியை அவரது குடும்பத்தினரிடம் சேர்த்து வைத்த காவல் கரங்கள் உதவி மையத்தினரை, போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.
கிண்டி காவல் எல்லைக்கு உட்பட்ட மடுவாங்கரை பகுதியில், 80 வயது மூதாட்டி ஆதரவற்ற நிலையில் இருப்பதாக காவல் கரங்கள் குழுவினருக்கு, ஜூலை, 30ம் தேதி தகவல் கிடைத்தது. இதையடுத்து மூதாட்டியை மீட்ட குழுவினர், காப்பகத்தில் சேர்த்து அவருக்கு தேவையான உதவியை வழங்கி வந்தனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட மூதாட்டி, உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள், 80 என்பதும், நினைவு மறதி காரணமாக கடந்த ஜூன் 8ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியவர், மடுவாங்கரை பகுதியில் சுற்றி வந்ததும் தெரியவந்தது.
மூதாட்டி காணாமல் போனது தொடர்பாக, அவரது உறவினர்கள், உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்ததும் தெரியவந்தது.
விசாரணைக்கு பின், மூதாட்டியை, அவரது குடும்பத்தினருடன் காவல் கரங்கள் குழுவினர் நேற்று சேர்த்தனர்.
காவல் கரங்கள் குழுவினரின் செயலை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.
காவல் கரங்கள் உதவி மையம் வாயிலாக, இதுவரை 1,415 பேர் மீட்கப்பட்டு அவர்களது குடும்பத்துடன் சேர்த்து வைக்கப் பட்டுள்ளனர்.
மேலும்
-
பாதுகாப்பு விதிமுறைகளை மீறுகிறார் ராகுல்: சிஆர்பிஎப் புகார்
-
நிஜ ரமணாக்கள்
-
கிளம்பும் நேரத்தில் ஏற்பட்ட பிரச்னை: புறப்பட்ட இடத்துக்கு திரும்பிய ஸ்பைஸ்ஜெட் விமானம்
-
' அமெரிக்கா செய்ததையே செய்தோம்': கத்தார் மீதான தாக்குதலை நியாயப்படுத்துகிறார் இஸ்ரேல் பிரதமர்
-
கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு வைர கிரீடம், தங்க நெக்லஸ், வாள்: காணிக்கை வழங்கிய இளையராஜா
-
அவரவர் நாட்டு கரன்சி அடிப்படையில் வர்த்தகம்; இந்தியா, மொரீஷியஸ் முடிவு