சோனியா மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட நீதிமன்றம் மறுப்பு

புதுடில்லி: இந்திய குடியுரிமை பெறுவதற்கு முன்னரே வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட டில்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இது தொடர்பாக விகாஸ் திரிபாதி என்பவர் டில்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா கடந்த 1983-ம் ஆண்டு ஏப்ரலில் இந்திய குடியுரிமை பெற்றார். ஆனால், புதுடில்லி சட்டசபை தொகுதி வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் 1980-ம் ஆண்டே இடம்பெற்றுள்ளது. போலி ஆவணங்கள் மூலமாக அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு இருக்கலாம் என்பதால் இதுதொடர்பாக சோனியா மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
ஆனால், இந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம், சோனியா மீது வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிட மறுத்துவிட்டது


மேலும்
-
போலந்தை தொடர்ந்து ருமேனியாவிலும் ஊடுருவிய ரஷ்ய டிரோன்
-
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
இந்தியா வரியை குறைக்க வேண்டும்: அமெரிக்க அமைச்சர்
-
அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.8 ஆக பதிவு
-
குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் எப்போது ஏவப்படும்? இஸ்ரோ தலைவர் நாராயணன் சொன்ன முக்கிய தகவல்
-
ராகுல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்: சொல்கிறார் முன்னாள் தேர்தல் கமிஷனர்