நீலகிரியில் கொட்டியது கன மழை

ஊட்டி:ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மதியம் 2 மணி நேரத்திற்கு மேல் கன மழை கொட்டியது. குறிப்பாக, ஊட்டி அருகேயுள்ள முத்தோரை பாலாடா, நஞ்சநாடு, இத்தலார், கப்பத்தொரை போன்ற பகுதிகளில் கனமழை கொட்டியது.
இதனால், முத்தோரை பாலாடா பகுதிகளில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியது.
இங்கு பயிரிடப்பட்டிருந்த கேரட் பயிர்கள் பாதிக்கப்பட்டன. சில இடங்களில் முட்டைகோஸ், உருளைக்கிழங்கு போன்ற பயிர்களும் பாதிக்கப்பட்டன.

Advertisement