கடலுாரில் திடீர் கனமழை; மின்சாரம் துண்டிப்பு
கடலுார்; கடலுாரில் நேற்று பெய்த திடீர் கன மழையால், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் மாவட்டங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
கடலுாரில் நேற்று காலை கடுமையான வெயில் நிலவி வந்த நிலையில், மதியத்திற்கு மேல் மேகமூட்டங்கள் அதிகரித்து மாலை 3:45 மணி முதல் இடி, மின்னுடன் கூடிய கனமழை பெய்தது. இதேப் போன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இரவு வரை மழை விட்டுவிட்டுப் பெய்ததால் கடலுார் மாநகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்க ஆரம்பித்தது.
கடலுார் மாநகரின் முக்கிய பகுதிகளான நேதாஜி ரோடு, ஹாஸ்பிடல் ரோடு மற்றும் அருகிலுள்ள சில கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
போலந்தை தொடர்ந்து ருமேனியாவிலும் ஊடுருவிய ரஷ்ய டிரோன்
-
ஆன்லைன் சூதாட்ட செயலி வழக்கு: நடிகை ஊர்வசி ரவுத்தேலாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
-
இந்தியா வரியை குறைக்க வேண்டும்: அமெரிக்க அமைச்சர்
-
அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 5.8 ஆக பதிவு
-
குலசேகரப்பட்டினத்தில் இருந்து ராக்கெட் எப்போது ஏவப்படும்? இஸ்ரோ தலைவர் நாராயணன் சொன்ன முக்கிய தகவல்
-
ராகுல் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்பட்டிருக்க வேண்டும்: சொல்கிறார் முன்னாள் தேர்தல் கமிஷனர்
Advertisement
Advertisement