விவசாய நிலத்திற்குள் புகுந்த பஸ்; திண்டிவனத்தில் பயணிகள் தப்பினர்

திண்டிவனம்; திண்டிவனம் அருகே பயணிகளுடன் சென்ற அரசு பஸ், சாலையோரம் இருந்த விவசாய நிலத்திற்குள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரத்தில் இருந்து வந்தவாசி நோக்கி அரசு பஸ்(டிஎன்21- என்1881) நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை முண்டியம்பாக்கத்தை சேர்ந்த ராஜா என்பவர் ஓட்டிச்சென்றார். 60 பயணிகள் இருந்தனர். காலை 11:00 மணியளவில், திண்டிவனம்-வந்தவாசி சாலையில் உள்ள வெள்ளிமேடுப்பேட்டை அருகே சென்ற போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோர விவசாய நிலத்திற்குள் புகுந்து, மண்ணில் சிக்கி நின்றது. இந்த விபத்தில் பஸ் பயணிகள் காயமின்றி தப்பினர். விபத்தில் சிக்கிய பஸ்சில் வந்த பயணிகள் வேறு பஸ்சில் அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இ.கம்யூ மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு!
-
மியான்மரில் பள்ளிகள் மீது ராணுவம் குண்டுமழை; 19 மாணவர்கள் பலி
-
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு: போராட்டம் அறிவித்த உத்தவ் தாக்கரே
-
திருச்சி விஜய் பிரசாரக் கூட்டத்தில் சொதப்பல்: 8 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
-
அமைதி, செழிப்பின் அடையாளமாக மணிப்பூரை மாற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி
-
செப்., 16ல் 6 மாவட்டங்கள், 17ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை
Advertisement
Advertisement