ரூ.82 ஆயிரத்தை நெருங்கியது தங்கம் விலை; ஒரே நாளில் ரூ.720 அதிகரிப்பு

சென்னை: ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ரூ.720 அதிகரித்துள்ளது.
அண்மைக் காலங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி சென்று வருகிறது. தொடர்ந்து உயருவதும், பின்னர் ஏதோ ஒரு நாளில் மெல்ல குறைவதுமாக தங்கத்தின் விலை இருந்தது. கடந்த இரு தினங்களாக எந்த மாற்றமும் நிகழாமல் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
ஒரு சவரன் ரூ.720 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.10,240 ஆகவும், சவரன் ரூ.81,200 ஆகவும் விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்துள்ளது.இதன்மூலம் ரூ.82 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
இதேபோல, வெள்ளியின் விலையும் புதிய உச்சத்தை தொட்டியுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.142க்கு விற்பனையாகி வருகிறது.
தங்கம், வெள்ளி விலை மாறி மாறி புதிய உச்சத்தை தொட்டு வருவதால் ஆபரணப் பிரியர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

மேலும்
-
செப்.14ல் இந்தியா-பாக். அணிகள் மோதல்: பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவர் தந்தை எதிர்ப்பு
-
காங்கோவில் படகு கவிழ்ந்து 86 பேர் பலி
-
நேபாளத்தின் இடைக்கால பிரதமராகிறார் சுசீலா கார்கி
-
பீஹாரை முன்னேற்றிய இரட்டை இன்ஜின் சர்க்கார்: அமைச்சர் பியூஷ் கோயல்
-
வெறும் 2 சீட்டுக்காக நாங்கள் திமுகவுடன் இருக்கவில்லை: திருமாவளவன்
-
சுரங்க திட்டங்கள் விவகாரம்; பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்