ரூ.51.17 கோடி ஜி.எஸ்.டி. மோசடி; கோவை தங்க வர்த்தகர் கைது
கோவை; கோவையில், தங்க நகை வர்த்தகத்தில், மூன்று விதமான சாப்ட்வேர்களைப் பயன்படுத்தி, பில்லில் மோசடி செய்து, ரூ.51.17 கோடி ஜி.எஸ்.டி. வரி ஏய்ப்பில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டார்.
கோவை மத்திய ஜி.எஸ்.டி. முதன்மை கமிஷனர் பங்கர்கர் அறிக்கை:
கோவையில் உள்ள, பெரிய தங்க வர்த்தக நிறுவனத்துக்கு சொந்தமான பல்வேறு மொத்த, சில்லறை வர்த்தக கடைகளில் ஜி.எஸ்.டி., துறை சார்பில், கடந்த மார்ச் 18 மற்றும் கடந்த ஆக. 6ம் தேதிகளில் சோதனை நடந்தது. முறையான ஜி.எஸ்.டி. பில் இன்றி விற்பனை செய்து, வரி ஏய்ப்பு செய்வதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.
இதில், அந்த குறிப்பிட்ட நிறுவனத்தில், தங்களது வியாபாரத்துக்காக மூன்று விதமான சாப்ட்வேர்களைப் பயன்படுத்தி பில் வழங்கியுள்ளனர். ஜி.எஸ்.டி.யுடன் ரசீது வழங்க ஒரு சாப்ட்வேர், தங்களின் ஜி.எஸ்.டி. மற்றும் ஜி.எஸ்.டி. இல்லாமல் மேற்கொள்ளப்படும் அனைத்துப் பரிவர்த்தனைகளையும் சேமித்து வைக்க ஒரு சாப்ட்வேர், தங்களின் உற்பத்தியைக் கண்காணிப்பதற்காக, இரண்டாவது ரசீதைப் பிரதியெடுக்கும் வகையில் மூன்றாவது சாப்ட்வேரை பயன்படுத்தியுள்ளனர்.
விசாரணையில், ஜி.எஸ்.டி. இல்லாமல், ரசீது வழங்காமல் திருட்டுத்தனமாக, தங்கத்தை விற்பனை செய்தது தெரியவந்தது. இப்படி மொத்தம் 2969கிலோ தங்கம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதன் வரி மதிப்பீடு ரூ.1,705.64 கோடியாகும். வரி ஏய்ப்பு 51.17 கோடி ரூபாய். இதையடுத்து, நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டு, 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
இ.கம்யூ மாநில செயலாளராக மு.வீரபாண்டியன் தேர்வு!
-
மியான்மரில் பள்ளிகள் மீது ராணுவம் குண்டுமழை; 19 மாணவர்கள் பலி
-
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு கடும் எதிர்ப்பு: போராட்டம் அறிவித்த உத்தவ் தாக்கரே
-
திருச்சி விஜய் பிரசாரக் கூட்டத்தில் சொதப்பல்: 8 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் ஏமாற்றம்
-
அமைதி, செழிப்பின் அடையாளமாக மணிப்பூரை மாற்றுவோம்: பிரதமர் மோடி உறுதி
-
செப்., 16ல் 6 மாவட்டங்கள், 17ல் 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை