ஜிஎஸ்டி குறைப்பு பெருமை எங்களையே சேரும்: சொல்கிறார் மம்தா

கோல்கட்டா: '' ஜிஎஸ்டி சீரமைப்பை வலியுறுத்தியது நாங்கள். இதற்கான பெருமையை பிரதமர் எடுத்துக் கொள்வது ஏன்?'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், வருமான வரிச்சலுகை மற்றும் ஜிஎஸ்டி குறைப்பால் மக்களுக்கு இரட்டை மகிழ்ச்சி கிடைத்துள்ளது என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது: மாநில அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இருப்பினும், ஜிஎஸ்டி குறைப்பால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால், அதற்கான பெருமையை நீங்கள் எடுத்துக் கொள்வது ஏன்?
ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என சொன்னது நாங்கள் இதற்கான ஆலோசனையை மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில் நாங்கள் எடுத்து சொன்னோம். இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.










மேலும்
-
உலக பொருளாதார ஆய்வாளர்கள் இந்தியாவின் வளர்ச்சியை ஒப்புக்கொண்டனர்; அமித்ஷா பெருமிதம்
-
கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் பதவி பறிப்பு: பின்னணி என்ன
-
செந்தில்பாலாஜி இப்படி செய்திருக்கக்கூடாது: காங்கிரஸ் கொந்தளிப்பு
-
ஐஎன்எஸ் தலைவராக விவேக் குப்தா தேர்வு
-
வங்கதேசம், இந்தியா இடையே பிரச்னைகள்; ஷேக் ஹசீனா மீது பழி சுமத்தும் முகமது யூனுஸ்!
-
சுரங்கம் அமைத்து வட மாநிலங்களுக்கு சிந்து நதிநீர்: மத்திய அரசு புது திட்டம்!