தீ விபத்தில் சிக்கிய மூதாட்டி சிகிச்சை பலனின்றி பலி

மணிமங்கலம்:மணிமங்கலம் அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சீதா, 70. இவர், வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டரில் இருந்து, காஸ் கசிந்துள்ளது. இதை கவனிக்காத சீதா, ஸ்டவ்வை பற்ற வைத்த போது, வீட்டில் தீ பற்றியது.

இதில் பலத்த தீக்காயமடைந்த சீதா, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், 50 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து, மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement