கைது செய்யும் சூழல் வந்தால் விஜயை கைது செய்வோம்: சொல்கிறார் துரைமுருகன்

சென்னை: கரூர் சம்பவத்தில் விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால் கைது செய்வோம் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூர், காட்பாடியில் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது: எவ்வளவு மழை வந்தாலும் தாங்க கூடிய அளவிற்கு வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம். கரூர் விவகாரத்தில் நீதிபதிகள் சொல்வது தான் மெயின்.
நீதிபதிகள் உண்மையை சொல்லி உள்ளார்கள். கள்ளக்குறிச்சி சம்பவத்தின்போது இருந்த சூழல் வேறு; கரூரில் 41 பேர் பலியானது சாதாரணம் அல்ல. இவ்வாறு துரைமுருகன் கூறினார்.
நிருபர்: விஜய் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், கட்சியினரை ஏதும் தொடக் கூடாது என்று சொல்லி இருக்கிறாரே?
துரை முருகன் பதில்: விஜய் ஒரு தலைவர், அவர் தக்கப்படி கட்சியினர் இடம் என்ன பேச வேண்டுமோ அதனை பேசுகிறார். தவெக தலைவர் விஜய்யை கைது செய்யும் நிலை வந்தால் கைது செய்வோம்.
தேவையில்லாத சூழலில் பண்ண மாட்டோம். அனாவசியமாக நாங்கள் யாரையும் கைது செய்ய மாட்டோம்.










மேலும்
-
உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல்; பயணிகள் பலர் படுகாயம்!
-
இந்தியா எனக்கு கோவில் போன்றது; பாக்., கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா உருக்கம்
-
நீரவ் மோடி நாடு கடத்தும் விவகாரம்; பிரிட்டனுக்கு இந்தியா கொடுத்த உத்தரவாதம்
-
திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவாவின் பங்களிப்பு தேச ஒற்றுமைக்கு ஊக்கமளிக்கும்; பிரதமர் மோடி
-
இஸ்ரேல் பிணைக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ் அமைப்பு முடிவு; உலக நாடுகள், ஐநா வரவேற்பு
-
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு