திருப்பூர் குமரன், சுப்பிரமணிய சிவாவின் பங்களிப்பு தேச ஒற்றுமைக்கு ஊக்கமளிக்கும்; பிரதமர் மோடி

புதுடில்லி: தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் முன்னேற, விடுதலை போராட்ட தியாகிகள் திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பங்களிப்புகள் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை; இன்று நாம், பாரத மாதாவின் இரு தவப் புதல்வர்களான திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரை நினைவு கூர்ந்து வணங்குவோம். உன்னதமான தமிழகத்தைச் சேர்ந்த இருவரும், இந்தியாவின் விடுதலைக்காகவும், தேசப்பற்று உணர்வை விதைப்பதற்காகவும் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்தவர்களாவர்.
திருப்பூர் குமரன், தன் இறுதி மூச்சுவரை நமது தேசியக் கொடியை ஏந்தி உயிர் தியாகம் செய்தார். இதன் மூலம் அசாத்திய துணிச்சலையும் தன்னலமற்ற தியாகத்தையும் அவர் வெளிப்படுத்தினார். சுப்ரமணிய சிவா, தமது தைரியமான எழுத்து மற்றும் அனல் பறக்கும் உரை வீச்சின் மூலம் எண்ணற்ற இளைஞர்களிடையே கலாசார பெருமிதத்தையும், தேசப்பற்றையும் விதைத்தார்.
இவ்விரு மாமனிதர்களின் முயற்சிகள், நம் அனைவரின் நினைவிலும் நீக்கமற நிறைந்திருப்பதுடன், காலனித்துவ ஆட்சியிலிருந்து நமது விடுதலையை உறுதி செய்த ஏராளமான மக்களின் போராட்டங்களையும் இன்னல்களையும் நமக்கு நினைவூட்டுகின்றன. தேச ஒற்றுமை மற்றும் வளர்ச்சியை நோக்கி நாம் அனைவரும் முன்னேற, இவர்களது பங்களிப்புகள் நமக்குத் தொடர்ந்து ஊக்கமளிக்கட்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (11)
T.sthivinayagam - agartala,இந்தியா
04 அக்,2025 - 19:57 Report Abuse

0
0
rajan - ,
04 அக்,2025 - 21:04Report Abuse

0
0
Indian - kailasapuram,இந்தியா
04 அக்,2025 - 22:02Report Abuse

0
0
Reply
Indian - kailasapuram,இந்தியா
04 அக்,2025 - 19:16 Report Abuse

0
0
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
04 அக்,2025 - 20:08Report Abuse

0
0
Reply
joe - ,இந்தியா
04 அக்,2025 - 18:21 Report Abuse

0
0
Reply
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
04 அக்,2025 - 18:10 Report Abuse

0
0
Reply
பாலாஜி - ,
04 அக்,2025 - 18:01 Report Abuse

0
0
Narayanan Muthu - chennai,இந்தியா
04 அக்,2025 - 20:14Report Abuse

0
0
Reply
Sundar R - ,இந்தியா
04 அக்,2025 - 17:27 Report Abuse

0
0
Reply
மேலும்
-
ஆசிரியர்கள் வாகனத்தை சுத்தப்படுத்திய மாணவர்கள்: வீடியோ பரவியதால் சர்ச்சை
-
அண்ணாமலை திடீரென டில்லி பயணம்
-
மஹா தீப நெய்குட காணிக்கை கவுன்டர் அருணாசலேஸ்வரர் கோவிலில் திறப்பு
-
ஹெலிகாப்டர் ரைடு நடத்திய நிறுவனத்திடம் ரூ.ஒரு லட்சம் வரி தினமலர் செய்தி எதிரொலி
-
புரட்டாசி எதிரொலி ஆடு விற்பனை மந்தம்
-
தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 1,968 விவசாயிகள் தற்கொலை அன்புமணி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement