புரட்டாசி எதிரொலி ஆடு விற்பனை மந்தம்
இடைப்பாடி, சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் சந்தையில் நேற்று, 2,350 ஆடுகளை, விவசாயிகள், வியாபாரிகள் கொண்டு வந்தனர். 10 கிலோ வெள்ளாடு, 9,350 முதல், 9,700 ரூபாய்; செம்மறியாடு, 8,300 முதல், 8,850 ரூபாய் வரை விலைபோனது. கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், 100 முதல், 300 ரூபாய் வரை, ஆடுகள் விலை அதிகரித்தது. இதன்மூலம், 2.20 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
இதுகுறித்து, ஆடு வியாபாரிகள் சங்க, சேலம் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி கூறுகையில், ''சந்தைக்கு வாரந்தோறும், 4,000 முதல், 6,000 ஆடுகள் வரை கொண்டு வரப்படும். தற்போது புரட்டாசியால், கறி விற்பனை குறைந்த அளவில் உள்ளது. இதனால் சந்தையில் ஆடுகள் வரத்து சரிந்தது. 500க்கும் மேற்பட்ட ஆடுகள், விற்கப்படாமல் திரும்ப கொண்டு செல்லப்பட்டன,'' என்றார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எத்தனை பேர் வந்தாலும்... திருமாவளவன் நம்பிக்கை
-
ஆள்மாறாட்டம் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது
-
பாம்பன் மீனவர் வலையில் சிக்கிய டூம்ஸ்டே மீன்
-
நாட்டரசன்கோட்டை சர்ச்சில் திருட்டு
-
மதுரை வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து மீனாட்சி கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதா? * ஆளும் அரசுக்கு ஆபத்து என பட்டர்கள் எச்சரிக்கை
-
ரேஷன் கடை பணியாளர்கள் இன்று முதல் வேலைநிறுத்தம்
Advertisement
Advertisement