ஆள்மாறாட்டம் 5 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

திருநெல்வேலி: திருநெல்வேலி சார்பதிவாளர் அலுவலகத்தில் 2019ல் சார்பதிவாளராக இருந்த சண்முகந்தரம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதில், 2019 அக்.,18ல் ஜோசப் சில்வெஸ்டர் பியூஸ் டேவிட் என்ற பெயரில் ஒருவர் அலுவலகத்திற்கு வந்து ஆவணம் தாக்கல் செய்தார். அவர் உடன் 3 பேர் வந்திருந்தனர். ஆவணங்களை பரிசீலித்தபோது அவை போலியானவை என தெரியவந்தது. அவர்களை விசாரணைக்கு அழைத்தபோது, அவர்கள் அனைவரும் தப்பிச் சென்றனர் என தெரிவித் திருந்தார்.

2020 மார்ச் 19-ல் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வந்தனர். 5 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த வழக்கில் தென்காசி மாவட்டம் கடையநல்லுாரைச் சேர்ந்த முப்பிடாதி 47, என்பவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

Advertisement