நாட்டரசன்கோட்டை சர்ச்சில் திருட்டு
சிவகங்கை : சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டை பனங்காடி ரெகோபோத் திருச்சபை சர்ச்சில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இந்த சர்ச்சில் பாஸ்டராக இருப்பவர் ஆரோக்கியசாமி. இவர் அக்., 4ல் சர்ச்சை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்த போது சர்ச்சின் கதவில் இருந்த பூட்டுக்கள் உடைக்கப்பட்டு இருந்தன. மர்மநபர்கள் உள்ளே புகுந்து சர்ச்சில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்பிலான கீ போர்டு, அலைபேசி, டிவி., லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது. இதில் ஈடுபட்டவர்களை எஸ்.ஐ., சக்திவேல் மற்றும் போலீசார் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஒடிசாவில் பாஜ பிரமுகர் சுட்டுக்கொலை; பைக்கில் தப்பிய மர்ம நபர்களை தேடும் போலீஸ்
-
அக்டோபர் 12ல் சுற்றுப்பயணம் தொடக்கம்; நிபந்தனைகளுடன் நயினார் பிரசாரத்திற்கு அனுமதி
-
கட்டாக்கில் நீடிக்கும் வன்முறையால் பதற்றம்: இணையதள சேவை முடக்கம் மேலும் நீட்டிப்பு
-
பிரேமலதாவின் தாயார் அம்சவேணி காலமானார்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.600 உயர்வு: ஒரு சவரன் ரூ.89,600!
-
இந்தோனேஷியாவில் பள்ளி கட்டடம் இடிந்த சம்பவத்தால் தொடரும் துயரம்: பலி 61 ஆக உயர்வு
Advertisement
Advertisement