வடிகால்வாய் அடைப்புகளால் திடீர் மழைக்கு வெள்ள பாதிப்பு
சென்னை: வடிகால்வாய்களில் அடைப்புகளால், சென்னையில் நேற்று மாலை பெய்த மழைக்கு, பல பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.
சென்னையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை திடீரென ஒரு மணி நேரம் வரை, பல இடங்களில் மழை பெய்தது.
கிண்டி, வேளச்சேரி, தரமணி, ஆதம்பாக்கம், நங்கநல்லுார் பகுதிகளில், சாலையில் வெள்ளம் ஆறாக ஓடும் அளவுக்கு மழை பெய்தது. பல இடங்களில், வடிகால்வாய்களில் மழைநீர் செல்லவில்லை.
குறிப்பாக, வேளச்சேரி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, அம்பேத்கர் நகர், அஷ்டலட்சுமி நகர், பாலாஜி காலனி, சிட்டி லிங்க் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல தேங்கியது.
சில பகுதியில் வடிகால்வாய்களில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, மழைநீர் வெளியேறாமல் மணிக்கணக்கில் தேங்கி நின்றது. இதனால், அப்பகுதியில் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர்.
மேலும்
-
மருத்துவத்துக்கான நோபல் பரிசு இன்று அறிவிப்பு!
-
அமைச்சர் துரைமுருகன் சொத்துகுவிப்பு வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
-
அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை தீபாவளி போனஸ்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
தலைமை நீதிபதி கவாயை தாக்க முயற்சி; சுப்ரீம் கோர்ட்டில் பரபரப்பு
-
நெருங்கும் வடகிழக்கு பருவமழை; முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
-
மேற்குவங்கத்தில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு; கிராமமே புதையுண்ட துயர காட்சிகள்!