பஞ்சப்பட்டி பகுதிகளில் நெல் சாகுபடி பணி மும்முரம்
கிருஷ்ணராயபுரம், பஞ்சப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில், விவசாயிகள் கிணற்று நீர் பாசன முறையில் நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த பஞ்சப்பட்டி, வீரிய பாளையம், பாப்பகாப்பட்டி, சிவாயம், வயலுார் கிராமங்களில் விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக விவசாய நிலங்களில் நாற்றங்காலில் நெல் விதைகள் துாவி, பயிர்கள் வளர்ந்து வருகிறது.
மேலும் உழவு செய்யும் வயல்களில் டிராக்டர் கொண்டு உழவு செய்யப்பட்டு நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது. இதில், நாற்றங்காலில் வளர்ந்து வரும் நெற் பயிர்களை பறித்து விவசாய கூலி தொழிலாளர்கள் கொண்டு நெற் பயிர்கள் நடவு பணி செய்யப்படுகிறது.
தேவையான நீர் கிணறுகளில் உள்ளதால் விவசாயி கள் ஆர்வத்துடன், நெல் சாகுபடி பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அமைச்சர் சிவராஜ் தங்கடகி, எம்.பி., ராஜசேகர ஹிட்னால்... துரோகிகள்!: காங்., 'மாஜி' அமைச்சர் இக்பால் அன்சாரி ஆவேசம்
-
மொபைல் டவர் நிறுவ போராட்டம் ஜாதிவாரி சர்வே புறக்கணிப்பு
-
முதல்வருக்கு ரூ.70 லட்சத்தில் புதிய மின்சார சொகுசு கார்
-
காரை 'ரிவர்ஸ்' எடுத்தபோது 11 மாத ஆண் குழந்தை பலி
-
காய்ந்த மரங்களை அகற்றுவதில் சிக்கல்
-
பெண் குழந்தை பிறந்ததால் சித்ரவதை மனைவி தற்கொலை; கணவர் மீது புகார்
Advertisement
Advertisement