தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலெர்ட்

சென்னை: தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.


இது குறித்து, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்று (அக் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:

* தேனி,

* கோவை,

* ஈரோடு,

* கிருஷ்ணகிரி,

* தருமபுரி,

* திருப்பத்தூர்,

* திருவண்ணாமலை,

* வேலூர்,

* ராணிப்பேட்டை,

* காஞ்சிபுரம்

நாளை (அக் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:

* நீலகிரி

* கோவை

* ஈரோடு

* தர்மபுரி

* கிருஷ்ணகிரி

* திருப்பத்தூர்

* வேலூர்


நாளை மறுநாள் (அக் 11) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பின்வருமாறு:

* நீலகிரி

* ஈரோடு

* சேலம்

* தர்மபுரி

* கிருஷ்ணகிரி

* திருப்பத்தூர்

* வேலூர்

* திருவண்ணாமலை

* விழுப்புரம்

* கள்ளக்குறிச்சி

அக் 12ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை

* திருப்பூர்

* திண்டுக்கல்

அக்., 13ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* ஈரோடு

* நீலகிரி

* கோவை

அக்டோபர் 14ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement