பெண்ணிடம் செயின் பறிப்பு ஆசாமிக்கு போலீஸ் வலை
பண்ருட்டி; பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமியை போலீ சார் தேடி வருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த அரசடிக்குப்பம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தேவர். இவரது மனைவி வனிதா,50; இவர் அரசடிக் குப்பம் அங்கன்வாடி மையத்தில் சத்துணவு அமைப்பாளராக உள்ளார்.
நேற்று முன்தினம் மாலை 6:00 மணியளவில் தனக்கு சொந்தமான மாடுகளை அரசடிக்குப்பம் - காட்டுப்பாளையம் சாலையில் உள்ள முந்திரி காட்டில் இருந்து வீட்டிற்கு ஓட்டி வந்தார்.
அப்போது மர்ம நபர் பின் தொடர்ந்து வந்து, வனிதாவின் கழுத்தில் இருந்த நான்கரை சவரன் செயினை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றார்.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் வனிதா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கத்துடன் போட்டி போட்டு எகிறும் வெள்ளி விலை; ஒரே நாளில் ரூ.5000 அதிகரிப்பு
-
ஒரே ஆண்டில் சரணடைந்த 1,000 மாவோயிஸ்ட்டுகள்
-
வரிவிதிப்பை கடுமையாக எதிர்த்த சீனா; இறங்கி வந்தார் டிரம்ப்!
-
இருமல் மருந்தால் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம்; சென்னையில் மருந்து ஆய்வாளர் வீட்டில் ரெய்டு
-
ஏ.ஐ., காரணமாக 20 லட்சம் பேர் வேலை பறிபோகக் கூடும்; நிடி ஆயோக் அறிக்கையில் தகவல்
-
வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்த தீவிரம்; இந்தியா - அமெரிக்கா இடையே பேச்சு
Advertisement
Advertisement