சில நாடுகள் சர்வதேச விதிகளை மீறுகின்றன: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு

புதுடில்லி: சில நாடுகள் சர்வதேச விதிகளை மீறுகின்றன என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
டில்லியில் பாதுகாப்பு துறை சார்பில் நடந்த நிகழ்ச்சியில், ராஜ்நாத் சிங் பேசியதாவது: இப்போது எல்லாம் சில நாடுகள் சர்வதேச விதிகளை வெளிப்படையாக மீறுகின்றன. சிலர் அதை குறைமதிப்பிற்கு உட்படுத்த முயற்சி செய்கின்றனர். அதேநேரத்தில், சிலர் தங்கள் சொந்த விதிகளை உருவாக்கி அடுத்த நூற்றாண்டில் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்கள்.
சர்வதேச விதிகள் அடிப்படையிலான ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இந்தியா உறுதியாக உள்ளது. வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு அமைதி அவசியம் என்பதை நாடுகள் உணர்ந்துள்ளன. நாம் சுதந்திரம் பெற்ற பிறகு இருந்தே, சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பேணுவதற்கான ஐநா சபைக்கு ஆதரவாக இந்தியா உறுதியாக நின்றுள்ளது.
அமைதி காத்தல் ஒரு போதும் விருப்பமான செயலாக இந்தியாவுக்கு இருந்தது இல்லை. மோதல்கள், வன்முறைகளுக்கு அப்பால் நிலைநிறுத்தப்பட வேண்டிய மனிதநேயம் இருக்கிறது. நம்பிக்கையின் அங்கமாக இந்தியா இருக்கிறது. மகாத்மா காந்தியின் நிலம் இந்தியா. காந்தியின் தத்துவமான அகிம்சை, சத்தியம், உண்மையில் ஆழமாக வேரூன்றி உள்ளது. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.
மேலும்
-
வங்கதேச ரசாயன கிடங்கில் தீ: 9 பேர் பலி
-
மங்கோலியா அதிபர் குரேல்சுக் உக்னாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு; 70 ஆண்டுகால இருதரப்பு உறவுகளுக்கு பாராட்டு
-
அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து முகாம் நடத்துவதா; அண்ணாமலை ஆவேசம்
-
அடையாள அரசியலுக்கு சென்றால் அழிவு ஏற்படும் : எச்சரிக்கிறார் சிங்கப்பூர் அமைச்சர்
-
தோஹா-ஹாங்காங் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு: ஆமதாபாத்தில் தரை இறக்கம்
-
வீடியோ மற்றும் போட்டோகிராபர் சங்க நிர்வாகிகள் தேர்வு