ரூபாய் படிப்படியாக பலம் பெறுகிறது

இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று பெரும்பாலும் 88.80 என்ற அளவில் நிலைத்திருந்தது. பெரிய ஏற்ற, இறக்கம் இல்லாவிட்டாலும், வலுவான அடிப்படைகள் மற்றும் நிலையான பொருளாதாரச் சூழல் காரணமாக, ரூபாய் தொடர்ந்து பலம் பெற்று வருகிறது. இது தற்போதைய சந்தை மாற்றங்களை எதிர்கொள்ள, ஒரு திடமான அடித்தளத்தை அளிக்கிறது.

அமெரிக்க டாலர் நேற்று மற்ற முக்கிய நாணயங்களுக்கு எதிராகச் சற்றே உயர்ந்தது. வாஷிங்டனில் இருந்து வந்த இணக்கமான தொனி இதற்கு உதவியது.

கடந்த வெள்ளியன்று சீனப் பொருட்களுக்கு 100% வரி விதித்த பிறகு ஏற்பட்ட சந்தை பதற்றத்தை, அதிபர் ட்ரம்பின் சமாதானமான கருத்து தணித்தது. மேலும், அமெரிக்க கருவூல செயலர் பெஸ்ஸன்ட், பெய்ஜிங்குடனான தகவல் தொடர்பு வழிகள் திறந்தே உள்ளன என்பதை உறுதிப்படுத்தினார்.

இந்த இணக்கமான மாற்றத்தால் டாலர் குறியீடு மீண்டும் 99-க்கு மேல் உயர்ந்தது.

தொழில்நுட்ப ரீதியாக ரூபாய்க்கு 88.20-88.40 என்ற அளவில் ஆதரவு உள்ளது. மேலும் 88.80-88.85 அருகில் எதிர்ப்பு உள்ளது.

ரூபாயின் நிலையான பலம், மேம்படும் வர்த்தக இராஜதந்திரம் மற்றும் மிதமான அந்நிய முதலீடுகள் ஆகியவற்றின் உதவியுடன், நம்பிக்கை படிப்படியாக மீண்டும் கட்டமைக்கப்படுகிறது.

ரூபாயின் மதிப்பு 88.85ஐ உடைத்து மேலே செல்வதை விட, 88.50-க்குக் கீழே செல்வதற்கான வாய்ப்பு 70% அதிகமாக உள்ளது.

88.40-க்குக் கீழே நீடித்தால், அது அளவான மதிப்பு உயர்வின் தொடக்கத்தைக் குறிக்கலாம், அதே சமயம் 88.85-ஐ தாண்டினால், மீண்டும் நிலையற்ற தன்மைக்கு துாண்டப்படலாம்.
Latest Tamil News
அமித் பபாரி,


நிர்வாக இயக்குநர்,


சி.ஆர்.போரக்ஸ் அட்வைசர்ஸ்

Advertisement