வேலை வாய்ப்பு முகாமில் 25 பேர் தேர்வு
நாமக்கல்: நாமக்கல்லில் நடந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில், 25 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
தனியார் துறை நிறுவனங்களும், -தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் வேலைவாய்ப்பு முகாம், நாமக்கல்-மோகனுார் சாலையில் செயல்பட்டுவரும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் மாவட்ட வேலைவாய்பு அலுவலர் ஷீலா தலைமையிலும், இளநிலை அலுவலர்கள் சுதா, சண்முகம் ஆகியோர் முன்னிலையிலும் நடந்தது.
அதில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து, 14 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றது. பல்வேறு பகுதியில் இருந்து, 80 பட்டதாரிகள் பங்கேற்றனர். அதில், 25 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணிநியமனை ஆணை வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
காசாவில் போர் முடிவடையாது: சொல்கிறார் இஸ்ரேல் பிரதமர்
-
கேரளாவை அச்சுறுத்தும் அமீபா தொற்று; 17 நாளில் 41 பேர் பாதிப்பு
-
'தினமலர்' செய்தித்தாள் அல்ல... அது ஒரு கலைக்களஞ்சியம்
-
என்னை ஒரு எழுத்தாளராக உருமாற்றம் செய்த 'தினமலர்' நாளிதழை மூச்சுள்ள வரை மறவேன்
-
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்
-
நாளை தீபாவளி; சென்னையில் இருந்து 3 நாட்களில் 6 லட்சம் பேர் சொந்த ஊருக்கு பயணம்
Advertisement
Advertisement