பழம்பெரும் பாலிவுட் நடிகர் அஸ்ரானி காலமானார்

மும்பை: பாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் அஸ்ரானி 84, காலமானார்.
இந்தி படவுலகில் மூத்த மற்றும் பல்துறை நடிகர் ஸ்ரீ கோவர்தன் அஸ்ரானி, நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று(அக்டோபர் 20) மாலை 4 மணியளவில் காலமானார். அவர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர். ஜெய்ப்பூரில் உள்ள செயிண்ட் சேவியர் பள்ளியில் அஸ்ரானி கல்வி பயின்றார்.
'ஷோலே', 'மேரே அப்னே', 'பவர்ச்சி', 'அபிமான்' மற்றும் 'சுப்கே சுப்கே' போன்ற படங்களில் பன்முக கதாபாத்திரங்களில் நடித்ததற்காக அவர் அறியப்பட்டார்.
நகைச்சுவையில் அவரது பங்களிப்பு மகத்தானது. 50 ஆண்டுகள் கலைத்துறை சேவையில் 350 க்கும் மேற்பட்ட பாலிவுட் திரைப்படங்களில் நடித்த பெருமை பெற்றவர்.
இவரது கேரக்டரில் அதிகம் ரசனையைபெற்றது, ரமேஷ் சிப்பியின் 'ஷோலே'யில் ஜெயிலராக நடித்ததுதான்.
அவரது மறைவுச் செய்தியால் திரையுலகமும் ரசிகர்களும் மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.
மேலும்
-
ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தி.மு.க., அறிவித்த மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை கிடைக்குமா?
-
அ.தி.மு.க., பிரமுகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்
-
வெடிகுண்டு தயாரித்தவர் கைது 250 கிலோ வெடிமருந்து பறிமுதல்
-
பள்ளி இடைநிற்றலை தடுக்க புதிய வாகனங்கள் அறிமுகம் பிற மலை கிராமங்களுக்கும் கூடுதல் வசதி செய்ய வலியுறுத்தல்
-
கடம்பூர், குன்றி, ஆசனுாரில் விடியவிடிய கனமழை திம்பம் மலைப்பாதையில் மண் சரிவு; போக்குவரத்து துண்டிப்பு
-
பவானி ஆற்றில் வெள்ளம்: கொடிவேரியில் 2வது நாளாக தடை