ஆட்சி முடியும் நேரத்தில் நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி

சென்னை: நான்கரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல், ஆட்சி முடியும் நேரத்தில், உங்களுடன் ஸ்டாலின் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்? என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: ஈரோடு மாவட்டம்,அந்தியூர் சட்டசபை தொகுதி பர்கூர் மலையில், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் தமிழக கர்நாடகா எல்லைப் பகுதியான இங்கு, குட்டையூர், வேலாம்பட்டி, மட்டிமரத்தள்ளி ஆகிய மலை கிராமங்களுக்கு, நேரடியாகச் செல்ல பாதை இல்லாததால், கர்நாடக, தமிழக வனப்பகுதிக்கு மத்தியில் உள்ள கர்கேகண்டி நீரோடை பள்ளம் வழியாக, 20 கிலோ மீட்டர் பயணித்தே இந்த கிராமங்களுக்குச் செல்ல முடியும்.
பல ஆண்டுகளாக, பொதுமக்கள் சிரமமின்றி கடந்து கிராம பகுதிக்குச் செல்ல, இந்தப் பகுதியில் உயர்மட்டப் பாலம் அமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியும், தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்து கடந்த ஐந்து ஆண்டுகளில், சாலைகள் அமைக்க, பாலங்கள் கட்ட என, ரூ.78,000 கோடி செலவிட்டுள்ளதாக, நிதிநிலை அறிக்கையில் கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் பல கிராமங்களில், இன்னும் சாலை வசதிகள் செய்யப்படவில்லை.
மத்திய அரசு வழங்கும் கிராம சாலைகள் திட்டத்துக்கான நிதியும், எங்கு செல்கிறது என்பது தெரியவில்லை. ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகளாக, மக்கள் வரிப்பணத்தை விளம்பரங்களுக்கு வீணடித்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், பொதுமக்களின் அடிப்படைத் தேவையான சாலை வசதிகளைக் கூட ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பது வெட்கக்கேடு. நான்கரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல், ஆட்சி முடியும் நேரத்தில், உங்களுடன் ஸ்டாலின் என்று நாடகமாடுவதால் யாருக்கு என்ன பலன்?
ஒவ்வொரு மழைக்காலத்திலும், இது போன்ற கிராம மக்கள் அவதிப்படுவது முதல்வருக்கு தெரியாதா? சாலைகள் அமைத்தோம் என்று கணக்கு காட்டியிருக்கும் ரூ.78,000 கோடி நிதி எங்கு சென்றது என்பதற்கு, முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மேலும், போர்க்கால அடிப்படையில், சாலை வசதிகளற்ற மலைக்கிராமங்களுக்கு, உடனடியாகச் சாலைகள், உயர்மட்டப் பாலங்கள் அமைத்துத் தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (29)
கூத்தாடி வாக்கியம் - ,இந்தியா
23 அக்,2025 - 18:18 Report Abuse

0
0
Reply
Venugopal S - ,
23 அக்,2025 - 18:08 Report Abuse

0
0
vivek - ,
23 அக்,2025 - 18:27Report Abuse

0
0
Reply
K.n. Dhasarathan - chennai,இந்தியா
23 அக்,2025 - 18:00 Report Abuse

0
0
vivek - ,
23 அக்,2025 - 18:28Report Abuse

0
0
Reply
RAMESH KUMAR R V - ,இந்தியா
23 அக்,2025 - 17:58 Report Abuse

0
0
Reply
vbs manian - hyderabad,இந்தியா
23 அக்,2025 - 17:05 Report Abuse

0
0
pakalavan - ,இந்தியா
23 அக்,2025 - 17:43Report Abuse

0
0
Reply
N S - Nellai,இந்தியா
23 அக்,2025 - 17:04 Report Abuse

0
0
Reply
Mr Krish Tamilnadu - ,இந்தியா
23 அக்,2025 - 17:04 Report Abuse

0
0
pakalavan - ,இந்தியா
23 அக்,2025 - 17:47Report Abuse

0
0
Reply
vbs manian - hyderabad,இந்தியா
23 அக்,2025 - 17:03 Report Abuse

0
0
Reply
N S - Nellai,இந்தியா
23 அக்,2025 - 16:59 Report Abuse

0
0
Reply
BHARATH - TRICHY,இந்தியா
23 அக்,2025 - 16:32 Report Abuse

0
0
Reply
மேலும் 15 கருத்துக்கள்...
மேலும்
-
நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகள் துவக்கம்: 27-ல் அறிவிக்கிறது தேர்தல் கமிஷன்
-
கோயில் நிலத்தில் வணிக வளாகம் கூடாது: சுற்றறிக்கை அனுப்ப அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
-
100 ஆண்டுகள் ஆனாலும் ஆர்ஜேடியின் காட்டாட்சியை மக்கள் மறக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி
-
சிவப்பு நண்டுகளின் அதிசய பயணம்
-
இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது ஆஸி.,
-
கார் மீது லாரி மோதி விபத்தில் 3 பேர் பலி: அமெரிக்காவில் இந்தியர் கைது
Advertisement
Advertisement