கூடலூரில் 12 பேரை கொன்று சிக்கிய காட்டு யானை: முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு பயணம்
கூடலூர்: கூடலூரில் கராலில் அடைக்கப்பட்டிருந்த காட்டு யானையை வனத்தில் விடுவதற்காக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு வனத்துறையினர் அழைத்துச் சென்றனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி பகுதியில், 12 பேரை தாக்கி கொன்ற, ராதாகிருஷ்ணன் என்ற ஆண் காட்டு யானையை வனத்துறையினர் கடந்த மாதம் 23ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். முதுமலை புலிகள் காப்பகம், அபயாரணயம் யானைகள் முகாமில் அமைக்கப்பட்டுள்ள கராலில் அடைத்து யானையை அவர்கள் கண்காணித்து வந்தனர்.
உயரதிகாரிகள் உத்தரவுப்படி, கராலில் இருந்த காட்டு யானையை நேற்று, நள்ளிரவு கும்கி யானைகள் உதவியுடன் வெளியே அழைத்து வந்தனர். பின்னர் லாரி ஒன்றில் ஏற்றி, வனத்தில் விடுவதற்காக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு அழைத்துச் சென்றனர்.
வெகு விரைவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்திற்கு யானை கொண்டு செல்லப்படும் என்று, வனத்துறையினர் தெரிவித்தனர்.
யானைக்கு ஆதரவாக வாதாட சுப்ரீம்கோர்ட்டில வக்கீல் நியமனம்
ஐந்து அறிவு கொண்ட யானையை மீண்டும் காட்டிற்கு கொண்டு விடுவதை தவிர்த்து அதற்கு ஆறாவது அறிவு புகட்டி நாட்டில் நடமாடவிட்டால் சிறு குழந்தைகள் விளையாடி மகிழலாமே
கொலைவெறி கொண்ட மனிதனை நீதி விசாரணையில் கொள்கிறோம். அதுபோல் யானைகளை சர்க்கஸ் கூடாரத்தில் பழகவிடலாமே?
இது யானை பொம்மை இல்லை , ரியல் யானைமேலும்
-
போலீஸ் செய்திகள் தகராறில் 4 பேர் காயம்
-
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 67 போலீசார் பணியிட மாற்றம்
-
ஆண்டிபட்டியில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு இன்றி அன்றாடம் தவிப்பு; 25 ஆண்டுகளாக வலியுறுத்தியும் கிடைக்காத பைபாஸ் ரோடு திட்டம்
-
மொபைல்போன் சர்வீஸ் பயிற்சி விண்ணப்பங்கள் வரவேற்பு
-
படகு கவிழ்ந்து இறந்த மீனவர் உடல் கரை ஒதுங்கியது
-
பேட்டி