குடும்ப அரசியல் செய்யும் இரண்டு கட்சிகள்; தேஜஸ்வி, ராகுலை மேற்கோள் காட்டி விளாசிய அமித்ஷா
பாட்னா: லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வியை முதல்வர் ஆக்கவும், சோனியா தனது மகன் ராகுலை பிரதமர் ஆக்கவும் விரும்புகிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பீஹார் மாநிலத்தில் ககாரியாவில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அமித்ஷா பேசியதாவது: பீஹார் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்தால், மாநிலத்தில் காட்டாட்சி மீண்டும் வரும். மக்கள் அனைவரும் தேஜ கூட்டணிக்கு ஓட்டு அளிக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி மட்டுமே பீஹார் வளர்ச்சியடைய வேண்டும் என்று விரும்புகிறார். பீஹாரை நக்சலைட்டிலிருந்து விடுவிக்க தேஜ கூட்டணி அரசு பாடுபட்டுள்ளது.
உங்கள் ஓட்டுக்களை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பீஹார் மாநிலத்தின் வளர்ச்சியை உறுதி செய்வோம். இரண்டு கட்சிகள் குடும்ப அரசியல் செய்கிறது. ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வி யாதவை பீஹாரின் அடுத்த முதல்வராக வேண்டும் என்று விரும்புகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா தனது மகன் ராகுலை அடுத்த பிரதமராக்க வேண்டும் என்று விரும்புகிறார். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறியுள்ளது.
2016ல் சர்ஜிக்கல் ஸ்டிரைக், 2019ல் வான்வழித் தாக்குதல் மற்றும் 2025ல் ஆப்பரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானுக்கு இந்தியா மூன்று முறை தகுந்த பதிலடி கொடுத்து உள்ளது. பிரதமர் மோடி தனது ஆட்சியின் கீழ் நாட்டைப் பாதுகாப்பானதாக மாற்றினார். ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்க ராகுல் விரும்புகிறார். ஊடுருவல்காரர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமா இல்லையா? தேஜ கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் பீஹாரில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் அகற்றுவோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
நாட்டிலேயே பாஜகவை சேர்ந்த வாரிசு அரசியல்வாதிகள் அதிகளவிலான மக்கள் பிரதிநிதிகளாகஇருப்பது ஆங்கில நாளேடு நடத்திய ஆய்வில் அம்பலம். பாஜகவில் 387 பெரும் காங்கிரசில் 285 பெரும் சமாஜ்வாதி கட்சியில் 55 பேரும் பாஜக கூட்டணி தெலுகு தேச கட்சியில் 51 பெரும் வாரிசு அரசியல் வாதி மக்கள் பிரதிநிதிகளாக உள்ளனர். இனிமேல் அமித்ஷாவின் இந்த வெத்து வெட்டு ஊலைகளை மக்கள் நம்பமாட்டார்கள். உருப்படியாக பிஹாருக்கு செய்த மக்கள் நல திட்டங்களை பேசி மக்களின் நம்பிக்கைய பெற முயற்சிக்கவும்.
ஏன் ஜி அப்போ ராஜ்நாத் பையன் , சுஷ்மா பொண்ணு, இவர்கள் எல்லாம் வாரிசு அரசியல் இல்லையா ?
ஏன் உங்க ஆட்சியில் யாருமே குடும்ப அரசியலில் இல்லையா சும்மா அபாண்டமா பழி சொல்லாதீங்க. போய் முதல்ல உங்க கட்சியில்குடும்ப அரசியிலை பார்த்து விட்டு மற்ற கட்சியை பற்றி பிறகு நீ பேசுங்க
காந்தி காலத்திலேயே முழுக் குடும்பத்துடன் கட்சியில் இருந்தார்கள். அது பிரச்சனையல்ல. ஆனால் கட்சியே ஒரு குடும்பத்தின் பரம்பரைச் சொத்தாக இருப்பதுதான் ஆபத்து.
அப்படியே இங்கே தமிழ்நாட்டுக்கும் வாருங்கள்...... இங்கேயும் குடும்ப அரசியல் தலை விரித்து ஆடுகிறது.
குடும்ப அரசியல் என்று சொல்லி சொல்லி தற்போது பாஜாகவும் குடும்ப அரசியலுக்கு வந்து கொண்டு உள்ளதா என குழப்பம் ஏற்படுகிறது
ஏதோ உம்முடைய காலமும் ஓடுது ஒரு நாள் கொசு போல பட் என்று ஆட்சியை விட்டு இறகின்னல் சட்டென்று உம்மை நிலை சிட் என்று பறந்து விடும் உசார்
குடும்ப அரசியல் , உங்கள் நிம்மி இல்லை ஜெய்சங்கர் போல நியமன MP இல்லை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் , உம்மை பயன் போல நியமன ஆகவில்லை BCCI SEC என்று , ஒரிசாவை தமிழர் ஆளலாமா என்று கேட்ட உம்மை தேஜஸ்வி BEHHAR ஐ மட்டும் இரண்டு குஜராத்தி மிரட்டலாமா என்று கேட்கிறார் பதில் சொல்லுங்கள்
இரு முறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங் எப்போதுமே லோக்சபா எம்பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. இதற்கு முன்பு BCCI தலைவர்களாக இருந்த ராமன், ஏசி முத்தையா போன்றவர்கள் எந்த அணியில் விளையாடிக் கொண்டிருந்தனர்?. தமிழக கிரிக்கெட் சங்கத் தலைவராக இருக்கும் அசோக் பொன்முடி ஒரு ரஞ்சி கிரிக்கெட் போட்டியிலாவது விளையாடியதுண்டா?
இவர் காட்டும் என்னவாம், மகனுக்கு கிரிக்கெட் விதிமுறையை தெரியாது, கிரிக்கெட்டி Association இல் பெரியபதவி, இவர் தலைவருக்கு பொண்டாட்டியும் கிடையாயது, பிள்ளையும் கிடையாது. ஜெயிலுக்குப்போகவேண்டியவங்கள CM ஆகியிருக்கிறார். குடும்ப அரசியலும், பணம் வாங்கை பதவி கொடுப்பதும் ஒன்னுதான்.
குடும்ப அரசியல் வேறு, பிற தொழில் செய்வது வேறு.
இவர் பதவியில் இருப்பதால், இவரது மகன் என்ன வேலை அல்லது தொழில் செய்தால் நீங்கள் ஒத்துக்கொள்வீர்கள் ?
there are atleast a dozen in BJP starting from son of Eddy...father mla or mp ...son too mla or mp
Two hundreds, once for a change , use common sense, dont continue to remain as two hundred