மதுபாரை மூடக்கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்
போடி: போடி அருகே சங்கராபுரம் தேவாரம் செல்லும் மெயின் ரோட்டில் கருப்பசாமி கோயில், அரசு பள்ளி உள்ளது.
கோயில் அருகே மூன்று நாட்களுக்கு முன்பு தனியார் மதுபார் திறக்கப்பட்டது. பாருக்கு வருவோர் மது அருந்தி விட்டு கோயில், பள்ளி வளாகம், பகுதிகளுக்கு சென்று விடுகின்றனர். அங்கேயே போதையில் அட்டகாசம் செய்து வருகின்றனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறு, கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது.
இதனால் மதுபாரை முடக்கோரி பா.ஜ., சார்பில் சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர்கள், மலைச்சாமி, வினோத், முத்துமணி, மாவட்ட துணைத் தலைவர் மோகன்தாஸ், பொருளாளர் பொன் ஆனந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உடுப்பி மடத்துக்கு நவ., 28ல் மோடி வருகை
-
வேலை செய்த வீட்டில் திருடிய பெண் ரூ.51 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்பு
-
திருட்டு வழக்கில் இருவர் கைது ரூ.72 லட்சம் பொருட்கள் மீட்பு
-
பண்டிப்பூர், நாகரஹொளேயில் கடைசி 'சபாரி' பயணம் ரத்து
-
தங்கவயல் நகராட்சி பதவிக்காலம் நீடிப்பு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
-
'முடா' வழக்கில் மாஜி' கமிஷனர் தான் முக்கிய குற்றவாளி என 'திடுக்' தகவல்
Advertisement
Advertisement