தேசிய பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது: வல்லபாய் படேல் பிறந்தநாள் விழாவில் மோடி பேச்சு
 
  
ஆமதாபாத்: தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது என குஜராத்தில் நடந்த சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாள் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.
வாழ்த்துக்கள்
சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு 140 கோடி இந்தியர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரலாற்றை எழுதுவதில் நேரத்தை வீணாக்காமல் அதை உருவாக்குவதில் நாம் நேரத்தை வீணாக்க வேண்டும் என்று சர்தார் படேல் நம்பினார்; இந்தியாவை ஒன்றிணைப்பதன் மூலம் அவர் வரலாற்றைப் படைத்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை இந்தியா உடன் இணைப்பது சாத்தியமற்றது. 
இந்த பணியை வல்லபாய் படேல் நிறைவேற்றினார். ஊடுருவலுக்கு எதிராக தீவிர போராட்டத்தை மேற்கொள்ள இந்தியா முடிவு செய்துள்ளது. நாட்டிலிருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் வெளியேற்றுவதற்கு நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும். சர்தார் வல்லபாய் படேல் முழு காஷ்மீரையும் இந்தியாவுடன் ஒருங்கிணைக்க விரும்பினார். ஆனால் பிரதமர் ஜவஹர்லால் நேரு அதை அனுமதிக்கவில்லை. 
அடிமை மனநிலை
2014ம் ஆண்டு முதல் நக்சலிசம் மற்றும் மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திற்கு பாஜ அரசு பலத்த அடியை கொடுத்து வருகிறது. அச்சுறுத்தலை நாங்கள் துடைத்தெறிவோம். காங்கிரஸ் பிரிட்டிஷாரிடமிருந்து அடிமை மனநிலையை பெற்றது. காங்கிரஸ் கட்சியின் பலவீனமான கொள்கைகளால், காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிற்குள் சென்றது. நக்சல் பயங்கரவாதம் முழுமையாக ஒடுக்கப்படுகிறது. 
சமரசம் இல்லை
தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் எந்த சமரசமும் கிடையாது. பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு இந்தியாவின் வலிமை காட்டப்பட்டு உள்ளது. ஓட்டு வங்கி அரசியலுக்காக நாட்டின் பாதுகாப்பை முந்தைய அரசாங்கம் சமரசம் செய்து கொண்டது. ஊடுருவல்காரர்களால் நமது நாட்டின் ஒற்றுமை, உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது. தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்க நாடு தற்போது உறுதியான, தீர்க்கமான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
 மோடி அவர்களே. ஜார்கண்ட்ல் கணாணுக்கு தெரிந்த நக்ஸல்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒழித்து கட்டும் பணியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். பாராட்டுகள். மற்ற மாநிலங்களில் உங்கள் கண்ணுக்கு தெரியாமல் சாதாரண குடிமக்கள் வேஷத்தில் திரிந்து கொண்டிருக்கிற நக்ஸல்களையும் தீர்த்து கட்டுங்கள்.
  மோடி அவர்களே. ஜார்கண்ட்ல் கணாணுக்கு தெரிந்த நக்ஸல்கள் இருக்கிறார்கள். அவர்களை ஒழித்து கட்டும் பணியில் ஈடுபட்டு இருக்கிறீர்கள். பாராட்டுகள். மற்ற மாநிலங்களில் உங்கள் கண்ணுக்கு தெரியாமல் சாதாரண குடிமக்கள் வேஷத்தில் திரிந்து கொண்டிருக்கிற நக்ஸல்களையும் தீர்த்து கட்டுங்கள். இந்த மாதிரி பொய்யான வாக்குறுதி திமுக பாஜக ரெண்டும் ஒன்று தான்
  இந்த மாதிரி பொய்யான வாக்குறுதி திமுக பாஜக ரெண்டும் ஒன்று தான் நாட்டில் ஒரு நக்சலைட் கூட இல்லாமல் துடைத்தெறிவது மகத்தான சாதனை. அதே போல ஒரு இஸ்லாமியத் தீவிரவாதியும் இஸ்லாமியத் தீவிரவாத ஆதரவாளரும் அற்ப திராவிட கட்சியினரும் இல்லாமல் செய்தால் மத்தியிலும் மாநிலங்களிலும் என்றென்றும் பாஜக ஆட்சி தான். நாடும் விரைவில் முன்னேறி விடும்.
  நாட்டில் ஒரு நக்சலைட் கூட இல்லாமல் துடைத்தெறிவது மகத்தான சாதனை. அதே போல ஒரு இஸ்லாமியத் தீவிரவாதியும் இஸ்லாமியத் தீவிரவாத ஆதரவாளரும் அற்ப திராவிட கட்சியினரும் இல்லாமல் செய்தால் மத்தியிலும் மாநிலங்களிலும் என்றென்றும் பாஜக ஆட்சி தான். நாடும் விரைவில் முன்னேறி விடும். இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக நடக்கின்ற தேசத்துரோக நடவடிக்கையை இரும்பு கரம்கொண்டு ஒடுக்கவேண்டும். கடுமையான சட்டங்கள் காலத்தின் தேவை.
  இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக நடக்கின்ற தேசத்துரோக நடவடிக்கையை இரும்பு கரம்கொண்டு ஒடுக்கவேண்டும். கடுமையான சட்டங்கள் காலத்தின் தேவை.மேலும்
-     
          அமெரிக்கர்களின் கனவுகளை திருடும் வெளிநாட்டினர்: டிரம்ப் நிர்வாகம் குற்றச்சாட்டு
-     
          நாட்டுக்கோட்டை நகரத்தார் காசியில் கட்டிய 10 மாடி தர்ம சத்திரம்: திறந்து வைத்தார் துணை ஜனாதிபதி
-     
          வங்கதேசம், இலங்கை, நேபாளத்தில் ஆட்சி மாற்றங்கள் மோசமான நிர்வாகத்தின் சான்று; அஜித் தோவல்
-     
          காங்கிரஸ் எம்பி கார்த்தியின் சொத்து முடக்கம்: உறுதி செய்தது தீர்ப்பாயம்
-     
          அதிக பெண் பட்டதாரிகளை கொண்ட நாடு இந்தியா; பிரதமர் மோடி பெருமிதம்
-     
          அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்


 
  
  
 


