ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்: ராகுல்
புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தல் நாளை( நவ.,06) நடக்கும் நிலையில் வாக்காளர்கள் அதிகளவு ஓட்டுப்போட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல், ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள் எனக்கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் வெளியிட்ட 'எக்ஸ்' சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: நாளை ஓட்டுப்போடுவதற்கான சாதாரண நாள் மட்டும் அல்ல. பீஹாரின் எதிர்காலத்தின் திசை கண்டறிவதற்கான நாள். உங்களில் பலர் முதல்முறையாக நாளை ஓட்டுப் போட போகிறீர்கள். இது உங்களின் உரிமை மட்டும் அல்ல. ஜனநாயகத்தின் மிகப்பெரிய கடமை.
ஹரியானாவில் ஓட்டுத் திருட்டு என்ற ஒரு மோசமான விளையாட்டு எப்படி விளையாடப்பட்டது என்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள். மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் என அனைத்து இடங்களிலும் மக்களின் குரல்கள் ஒடுக்க முயற்சி செய்யப்படுகிறது. தற்போது பீஹார் மீதும், உங்களின் ஓட்டு மற்றும் எதிர்காலம் மீது கண் வைத்துள்ளனர்.
நாளை ஓட்டுச்சாவடிகளுக்கு அதிகளவு சென்று மகாகத்பந்தன் கூட்டணிக்கு ஓட்டு போடுங்கள். ஓட்டுச்சாவடியில் நடக்கும் ஒவ்வொரு சதி, ஒவ்வொரு சூழ்ச்சிக்கும் எதிராக விழிப்புடன் இருங்கள். பொது மக்களிடம் உள்ள விழிப்புணர்வே, ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் ஆகும். பீஹாரின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. ஓட்டுத்திருட்டு, அரசு திருட்டு என்ற சதியை தோற்கடியுங்கள். உண்மை மற்றும் அஹிம்சை வழியில் நடந்து உங்கள் ஓட்டு மூலம் ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள். இவ்வாறு அந்தப் பதிவில் ராகுல் கூறியுள்ளார்.
வேலை வெட்டி ஒன்றும் இல்லாமல் இருந்தால் இப்படி கண்ட மாதிரி பேச வேண்டியது வரும். ஜனநாயகத்தை மக்கள் காப்பாற்றுவார்கள். இவர் சும்மா இருந்தாலே போதும்.
இந்தியாவை ஆளும் கனவு எப்போதோ தகர்ந்து விட்டது.
கண்டிப்பாக. உங்களையும் உங்கள் கூட்டாளிகளையும் வீட்டுக்கு உபயோகமாக உழைத்து சாப்பிட வேண்டிய வேளை வந்து விட்டது.
ராகுலிடம் இருந்து தான் இந்தியாவை காப்பாற்ற வேண்டும்
அவ்வளவு இஷ்டமா ?
ராகுலிடம் இருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள்
இதுக்கு தான் காந்தி அப்பவே சொன்னார் காங்கிரெஸ்யை கலைத்து விடுங்கள் என்று நல்லது சொன்ன யா கேட்கிறா ....
முதலில் இந்தியாவை இவரிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.
இந்த பப்புவின் குடியுரிமையை ரத்து செய்து பாகிஸ்தானுக்கோ இல்லை சீனாவுக்கோ இல்லை துருக்கிக்கோ அனுப்பி வைக்கவும். மற்றொரு வாய்புள்ள இடம் அமெரிக்கா. அன்னாட்டு ஜனாதிபதிக்கு ஆலோசகர் பதவிக்கு ஆள் தேவையாம்.
ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து உங்கள் கான்கிராஸ் கட்சி தான்.... உங்களிடம் இருந்து தான் ஜனநாயகத்தையும்..... நாட்டையும் காப்பாற்ற வேண்டும்.மேலும்
-
மத்திய அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மீது தாக்குதல்; திரிணமுல் காங்., தொண்டர்கள் அடாவடி
-
ஓட்டுத் திருட்டு என்பது தவறான புகார்; பிரேசில் அழகி படம் கொண்ட பெண் வாக்காளர் சொல்வது இதுதான்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு; 2 நாட்களாக குறைந்த நிலையில் இன்று உயர்வு
-
பீஹார் வாக்காளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்துங்கள்: தேர்தல் கமிஷன் வேண்டுகோள்
-
கண்மாய்க்கு சொட்டு நீர்கூட வரவில்லை; இளையான்குடி கிராம மக்கள் கவலை
-
வந்தே மாதரம் என்போம்; பாரத தாயை வணங்குவோம்…!