சாதித்த மாணவிகள் பெருமிதம்
@block_B@
வினாடி - வினா போட்டி மிகவும் ஆர்வமாக இருந்தது. மாணவர்களின் சிந்தனை திறனை துாண்டும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால், பதில் தெரிவிப்பதில் எங்களுக்குள் போட்டி நிலவியது. பட்டம் இதழில் ஏராளமான பொது அறிவு கேள்விகள் இடம் பெற்றுள்ளன. இதை முழுமையாக படித்தால் எதிர் காலத்தில் அரசு போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கும் உதவியாக இருக்கும். விக் ஷயா, பிளஸ் 2 .block_B
@block_B@
வினாடி வினா போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தன. இதனால் மனதில் பதற்றம் நிலவியது. ஆனாலும் கேள்வியின் போது சிறிது நேரம் யோசித்து சரியான பதிலை தெரிவித்ததால் வெற்றி பெற முடிந்தது. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல, 'பட்டம்' இதழை உள்வாங்கி படித்து, அடுத்த கட்டமாக புதுச்சேரியில் நடைபெறும் மெகா வினாடி வினா போட்டியிலும் வெற்றி பெறுவேன். தேவதர்ஷிணி, பிளஸ் 1.block_B
@block_B@
தினமலர் பட்டம் இதழ் நடத்திய வினாடி வினா போட்டி, எனக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களது அறிவுத்திறன் எந்த அளவிற்கு உள்ளது என்பதை நாங்களே தெரிந்து கொள்ள நடந்த போட்டியாக கருதுகிறேன். போட்டியில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும் பசுமரத்தாணி போல மனதில் நன்றாக பதிந்துள்ளது. அறிவை வளர்க்க, நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவை தெரிந்து கொள்ள இந்த போட்டி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஹரிணி, பிளஸ் 1.block_B
@block_B@
சக மாணவர்களுடன் வகுப்பறையில் நடைபெறும் போட்டி போல இல்லாமல், பல்வேறு வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் முன்னிலையில் வினாடி - வினா போட்டி நடந்தது. போட்டியில், வெற்றி பெற்று கலெக்டர், சி.இ.ஓ., மூலம் சான்றிதழ் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. கல்வியில் சாதனை படைத்தவர்கள் எங்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி பேசியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தந்த தினமலர் நாளிதழுக்கு நன்றி. சிவசக்தி, பிளஸ் 1.block_B
மேலும்
-
ஜார்க்கண்ட் மத்திய சிறையில் கைதிகள் டான்ஸ் வீடியோ வைரல்: சிறை அதிகாரிகள் இருவர் சஸ்பெண்ட்
-
பிலிப்பைன்ஸில் புயலால் 114 பேர் பலி: தேசிய பேரிடராக அறிவிப்பு
-
4 வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவை: நவ., 8 ல் துவக்கி வைக்கிறார் பிரதமர்
-
இது பொற்கால ஆட்சி அல்ல; கொலைகார ஆட்சி: திமுக அரசை சாடிய நயினார் நாகேந்திரன்
-
நுாறு ஆண்டுகளைத் தொட்ட ராக்கெட்ஸ் நடனகுழு
-
மியான்மர் சைபர் மோசடி கும்பலில் சிக்கிய இந்தியர்கள் 270 பேர்; இன்று நாடு திரும்பினர்