பீஹாரில் துணை முதல்வர் கார் மீது தாக்குதல்: ஆர்ஜேடி தொண்டர்கள் அராஜகம்
பாட்னா: பீஹாரில் துணை முதல்வர் கார் மீது ராஷ்ட்ரீய ஜனதா தளம் தொண்டர்கள் கற்களையும், செருப்பையும் வீசி தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என விஜய்குமார் கூறியுள்ளார்.
பீஹார் சட்டசபைக்கு முதற்கட்ட தேர்தல் 121 தொகுதிகளில் இன்று நடந்து வருகிறது. 1,314 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பாஜவை சேர்ந்த துணை முதல்வர் விஜய் குமார் போட்டியிடும் லக்கிசாராய் தொகுதியும் அடக்கம்.
தேர்தல் விறுவிறுப்பாக நடக்கும் நிலையில், தொகுதியில் ஓட்டுப்பதிவு குறித்து ஆய்வு செய்ய விஜய் குமார் காரில் கிராமம் கிராமமாக வந்தார். கோரியாரி கிராமத்திற்கு வந்த போது அவரை சூழ்ந்து கொண்ட ராஷ்ட்ரீய ஜனதா தள தொண்டர்கள், கார் மீது தாக்குதல் நடத்தினர். செருப்புகளையும், கற்களையும் வீசிய அவர்கள், 'முர்தாபாத்' என கோஷம் போட்டு கிராமத்துக்குள் நுழைய விடாமல் தடுத்தனர். இதனையடுத்து அந்த இடத்துக்கு போலீசார் விரைந்துள்ளனர். முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில் துணை முதல்வர் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மிரட்டல்
இதனைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பியிடம் மொபைல்போனில் பேசிய விஜய் குமார் கூறுகையில், '' நான் கிராமத்தில் தான் இருக்கிறேன். கூட்டத்தின் என்னை சுற்றி வருகின்றனர். சிறப்பு அதிரடிப்படையினரை அனுப்ப வேண்டும். இங்கு போராட்டம் நடத்துவேன். துணை முதல்வரை செல்ல அனுமதிக்க மறுக்கின்றனர். கற்களையும், மாட்டுச்சாணத்தையும் வீசினர். ஆர்ஜேடி குண்டர்களை பாருங்கள். ஆட்சிக்கு வருவதற்கு முன்னரே அவர்கள் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் எனது ஓட்டுச்சாவடி முகவரை மிரட்டி வெளியே விரட்டிவிட்டனர். வாக்காளர்களை வெளியே விட அவர்கள் மறுக்கின்றனர் '' எனத் தெரிவித்தார்.
வாசகர் கருத்து (22)
Venugopal S - ,
07 நவ,2025 - 10:35 Report Abuse
கடைசி முயற்சியாக பாஜக கூட்டணி அனுதாப ஓட்டுக்களைப் பெறும் முயற்சியில் வெற்றி பெறுமா? 0
0
Reply
M Ramachandran - Chennai,இந்தியா
06 நவ,2025 - 17:12 Report Abuse
லொள்ளு மகன் மங்கா டயன் ணனாக இருக்கிறான். இது எதிர் அணிக்கு பலம் சேர்க்கும் என்பது கூட நினையக்க வில்லையா? ஆத்திரம் கண்ணய் கட்டுது 0
0
Reply
Rahim - ,இந்தியா
06 நவ,2025 - 16:22 Report Abuse
தோழ்வி உறுதி என்பதை தெரிந்துகொண்ட பாஜகவினர் தாங்களே செய்த ஏற்பாடு. 0
0
G Mahalingam - Delhi,இந்தியா
06 நவ,2025 - 18:07Report Abuse
திமுக ரவுடி கட்சி . பீகாரில் RJD. இரண்டு கட்சிகளும் கொள்ளை அடிப்பதில் கில்லாடி. விஞ்ஞான ஊழலில் திமுக மாட்டாமல் இருக்கு. லல்லு பிரசாத் சிறை சென்றார். இப்போது வயது முதிர்வால் ஜாமீனில் உள்ளார்.. 0
0
Reply
chennai sivakumar - chennai,இந்தியா
06 நவ,2025 - 16:02 Report Abuse
Issue shoot at sight order then all will be quite 0
0
Reply
Rahim - ,இந்தியா
06 நவ,2025 - 15:53 Report Abuse
பீகார் வாக்காளர்களை ஆர்ஜேடிக்கு எதிராக திருப்ப இவர்களே ஏற்பாடு செய்துகொண்ட கேடுகெட்ட தில்லாலங்கடி செட்டப் வேலை. 0
0
Kumar Kumzi - ,இந்தியா
06 நவ,2025 - 16:43Report Abuse
பார்ர்ரா இந்தியாவில் கதறுறா ஹாஹாஹா 0
0
Reply
Rahim - ,இந்தியா
06 நவ,2025 - 15:45 Report Abuse
ஓட்டு திருட்டில் இது ஒரு நவீன ஓட்டு திருட்டு 0
0
Kumar Kumzi - ,இந்தியா
06 நவ,2025 - 17:30Report Abuse
பார்ர்ரா பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா ஓட்டு திருட்டு பத்தி பேசுறான் ஹாஹாஹா 0
0
Kumar Kumzi - ,இந்தியா
06 நவ,2025 - 17:34Report Abuse
என்ன கொடுமை சரவணா இது திருட்டுத்தனமா வந்தவே திருட்ட பேசுறான் ஹாஹாஹா 0
0
Reply
Rahim - ,இந்தியா
06 நவ,2025 - 15:44 Report Abuse
அதாவது மோடி போகிற இடமெல்லாம் சொல்லும் அந்த வார்த்தைக்கு இவரு சப்போர்ட்டா எடுத்துகுடுக்குறாராம். 0
0
Kumar Kumzi - ,இந்தியா
06 நவ,2025 - 16:44Report Abuse
மிஸ்டர் உனக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம் 0
0
Velan Iyengaar, Sydney - ,
07 நவ,2025 - 00:33Report Abuse
அதெப்படி போவான். இங்கே இருந்தால் தான் சிறுபான்மையினர் அப்டின்னு அடுத்தவன் பணத்தில் உண்டு kozikkalaam. ரத்தம் உறிஞ்சும் மூட்டை பூச்சி களை விட kodooramaanavargal 0
0
Reply
Rahim - ,இந்தியா
06 நவ,2025 - 15:41 Report Abuse
நாடகமெல்லாம் கண்டோம் உங்க நடிப்பு கம்பெனியிலே 0
0
Kumar Kumzi - ,இந்தியா
06 நவ,2025 - 16:45Report Abuse
சரி நீ இந்தியானா 0
0
Reply
MARUTHU PANDIAR - chennai,இந்தியா
06 நவ,2025 - 15:37 Report Abuse
லாலு குடும்பத்துக்கும் அவன் வாரிசுகளுக்கும் சாகும் வரை மாற்ற முடியாத
குணம் அராஜகம். எத்தனை ஆண்டுகள் குடும்பத்தோடு காட்டாட்சி செய்து மாநிலத்தை பாழடித்துள்ளான். 0
0
Reply
Kumar Kumzi - ,இந்தியா
06 நவ,2025 - 15:36 Report Abuse
தோல்வியின் உச்ச கட்டத்தின் ரவுடி கூட்டம் 0
0
Reply
மேலும்
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு பிரியங்கா மிரட்டல்: பீஹார் பிரசாரத்தில் சர்ச்சை
-
நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி; கூடுதல் நீர் திறப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
-
மசோதாக்கள் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை: கவர்னர் மாளிகை
-
லாலுவின் 3 தலைமுறைகள் வந்தாலும் தொடக்கூட முடியாது; அமித் ஷா சூளுரை
-
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்? கேட்கிறார் இபிஎஸ்
-
ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது: சுப்ரீம் கோர்ட்
Advertisement
Advertisement