சட்டவிரோத குடியேறிகள் வேலைகளைப் பறிக்கிறார்கள்: அமித்ஷா குற்றச்சாட்டு
பாட்னா: பீஹாரில் சட்டவிரோத குடியேறிகள் வேலைகளைப் பறிக்கிறார்கள். இந்த சட்டசபை தேர்தல் பீஹாரை ஊடுருவல் இல்லாத மாநிலமாக மாற்றும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
பீஹார் மாநிலத்தின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: பீஹாரில் சட்டவிரோத குடியேறிகள் வேலைகளைப் பறிக்கிறார்கள். அவர்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறார்கள். இந்த சட்டசபை தேர்தல் பீஹாரை ஊடுருவல் இல்லாத மாநிலமாக மாற்றும். ஆர்ஜேடி ஆட்சியில் இருந்தபோது படுகொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் நடந்தது.
அதே நேரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் அதற்கு இடமில்லை. பிரதமர் மோடி மக்கானா வாரியத்தை நிறுவினார். லாலு பிரசாத் ஆட்சிக்கு வந்தால், ஊடுருவலை ஆதரிக்க வாரியம் அமைக்கப்படும். சம்பாரண் புதிய விமான நிலையத்தைப் பெறும். மூடப்பட்ட அனைத்து சர்க்கரை ஆலைகளும் கூட்டுறவு சங்கங்கள் மூலம் மீண்டும் புத்துயிர் பெறும்.
மாநிலத்தில் தே.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,பல்வேறு புதிய நலத்திட்டங்கள் தொடங்கப்படும். இந்திராவின் ஊழலுக்கு எதிராக பீஹார் போர் தொடுத்தது. அவசரநிலையை எதிர்த்தது. ஆனால் இப்போது காங்கிரஸ் ஆர்ஜேடி உதவியுடன் ஆட்சி செய்ய முயல்கிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.
மேற்கு வங்காளத்தில் தான் சட்ட விரோத குடியேறிகள் அதிகம்மேலும்
-
தலைமை தேர்தல் கமிஷனருக்கு பிரியங்கா மிரட்டல்: பீஹார் பிரசாரத்தில் சர்ச்சை
-
நிரம்பும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரி; கூடுதல் நீர் திறப்பால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
-
மசோதாக்கள் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை: கவர்னர் மாளிகை
-
லாலுவின் 3 தலைமுறைகள் வந்தாலும் தொடக்கூட முடியாது; அமித் ஷா சூளுரை
-
பெண்களுக்கு பாதுகாப்பானதா தமிழகம்? கேட்கிறார் இபிஎஸ்
-
ஏர் இந்தியா விமான விபத்துக்கு யாரும் விமானியை குறை சொல்ல முடியாது: சுப்ரீம் கோர்ட்