பைக்கில் சென்ற போது விபத்து லாரி மோதி இருவர் பரிதாப பலி
திருப்பாதிரிப்புலியூர்: கடலுாரில் பைக் மீது லாரி மோதி, இருவர் உயிரிழந்தனர்.
கடலுார் மாவட்டம், நெய்வேலி அடுத்த வேலுடையான் நகரை சேர்ந்தவர் ஆரோக்கிய ஸ்டான்லி, 32, கடலுாரில் தனியார் நிறுவன விற்பனை மேலாளர். நேற்று காலையில் இவர், தன், 'யமஹா எப்.இசட்.,' பைக்கில், அவருடன் வேலை பார்க்கும் மேலவன்னியூரை சேர்ந்த விஜயகுமார், 29, என்பவருடன் ஜவான்பவன் நோக்கி சென்றார்.
பைக்கை விஜயகுமார் ஓட்டினார். முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முயன்றபோது, எதிரே வந்த லாரி, பைக் மீது மோதியது. இதில் விஜயகுமார், ஆரோக்கிய ஸ்டான்லி உயிரிழந்தனர்.
இதுகுறித்த புகாரின்படி, திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
டிஎன்ஏ கண்டுபிடிப்பாளர் ஜேம்ஸ் வாட்சன் காலமானார்
-
42 நாட்கள்; 52 லட்சம் வாகனங்கள்: பண்டிகை கால 'விறுவிறு' விற்பனை
-
அல்கொய்தா பயங்கரவாதி உத்தரபிரதேத்தில் கைது; இந்தியாவுக்கு எதிராக சதித்திட்டம்
-
டில்லியில் சகஜநிலைக்கு திரும்பியது விமான சேவைகள்; விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு
-
தேஜஸ் போர் விமானங்களுக்கு அமெரிக்காவின் இன்ஜின்கள்: ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து
-
4 மாவட்டங்களில் இன்று கனமழை
Advertisement
Advertisement