உலகம் முழுவதும் அமைதியை விரும்புகிறேன்; அதிபர் டிரம்ப்
வாஷிங்டன்: உலகம் முழுவதும் அமைதியை விரும்புகிறேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது:
அணு ஆயுத ஒழிப்பு ஒரு சிறந்த விஷயமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நான் அதிபர் புடினிடம் இதைப் பற்றிப் பேசியுள்ளேன். சீன அதிபர் ஜி ஜின்பிங்யிடம் இதைப் பற்றிப் பேசியுள்ளேன். மேலும் எல்லோரும் அந்தப் பணத்தை மற்ற விஷயங்களுக்குச் செலவிட வேண்டும்.
அணு ஆயுதத் திறன்களில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷ்யா மற்றும் சீனா இரண்டாவது இடத்திலும் உள்ளன. இதற்கு எந்தத் தேவையும் இல்லை. முன்னணி நாடுகள் கணிசமான அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன, நிதியை அதிக நன்மை பயக்கும் முயற்சிகளுக்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
ஏற்கனவே தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை சோதனை செய்ய வேண்டியது அவசியம் என போர் துறைக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்த நிலையில், ஏவுகணை சோதனையை அமெரிக்கா வெற்றிகரமாக நடத்தியது. இது வழக்கமாக நடத்தப்படும் சோதனை என்றும், முன்பே திட்டமிடப்பட்டது எனவும் தெரிவித்த விமானப்படை, அதிபர் டிரம்பின் உத்தரவுக்கும், சோதனைக்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரெண்டு நாளு முன்னாடிதான் அணுகுண்டு சோதனை நடத்தப் போறேன்னு சொன்னீங்க? இப்ப திடீர்னு அமைதிய விரும்புறேங்கிறீங்க! இது உலக நடிப்புடா சாமி! பலே ஆளுய்யா நீ!
நல்ல விஷயம். உலக வியாபார விஷயங்களை கண்டுக்காதீங்க.
தாத்தா கொஞ்ச நாள் அமைதியாக இருக்க நான் விரும்புகிறேன்
அமைதி வேணும்னு சொல்றவன் ஆயுத வியாபாரம் பண்ணமாட்டான்
உலகிலேயே சிறந்த மூத்த மொழி டமில் ஹைன்னுட்டு ஹிந்தியை திணிக்கிற மாதிரின்னு சொல்றீங்களா?
அமெரிக்கா பப்பூவே அமெரிக்கா அழிந்தால் உலகமே அமைதியாக இருக்கும் உங்களுக்கு ஆயுதம் விற்பனை செய்யவேண்டும் அதற்காக இரண்டு நாடுகளுக்கு இடையே கலகம் செய்து இரண்டு பேரிடமும் வியாபாரம் செய்வதை தவிர அமெரிக்கா உலகிற்கு என்ன செய்துள்ளது.அதன் அடிவருடிகள் இங்கிலாந்து ஆஸ்திரேலியா பிரான்ஸ் நாடுகளும் இதற்கு சொம்படிக்கும்
உலகம் முழுவதும் அமைதியை விரும்புகிறேன் - இது எப்போதுலிருந்து? சொல்லவே இல்லே
படிக்கிறது பைபிள், இடிக்கிறது சர்ச் ன்னு சொல்ற மாதிரி இருக்கே
வெனிசுலாவை சுற்றி போர்க்கப்பலை நிறுத்திவைத்து விட்டு, சொல்கிறவரை யார் நம்புவார்கள்?
நீங்கள் இப்படியே உக்ரைன் நாட்டுக்கு ஆயுதங்கள் கொடுத்து வாருங்கள்...... உலகம் முழுவதும் உள்ள அமைதி வந்து விடும்.....
உக்ரைனுக்கு நம்ம நாட்டிலிருந்து குண்டுகள் போகின்றன. அதையும் தெரிஞ்சி வெச்சுக்கவும்.மேலும்
-
தொழிற்சாலை பஸ் மோதி 8 பசு மாடுகள் உயிரிழப்பு
-
குப்பை லாரி சக்கரத்தில் சிக்கி தண்டையார்பேட்டை சிறுமி பலி தண்டையார்பேட்டையில் சோகம்
-
வேளச்சேரி - பரங்கிமலை இடையே 'சரக்கு ரயில்' இயக்கி சோதனை 17 ஆண்டுகளாக நீடித்த பணி நிறைவு
-
நுால் வெளியீட்டு விழா
-
இ - சேவை மையமா; பொது கழிப்பறையா? கோடம்பாக்கம் மண்டல ஆபீசில் அவலம்
-
வடசென்னையில் வழிப்பறி ஒரே நாளில் 10 பேர் கைது