ஃபோரக்ஸ் ஆர்.பி.ஐ., ஆதரவால் நிலையாக உள்ளது

இந்திய ரூபாய் மதிப்பு, நேற்று சற்று சரிந்தாலும், அதன் வரலாற்று குறைந்தபட்ச நிலைக்கு மேல் நீடித்தது. இந்த குறிப்பிடத்தக்க அமைதிக்கு காரணம், இந்திய ரிசர்வ் வங்கியின் அமைதியான தலையீடும்; சற்று பலவீனமான அமெரிக்க டாலரின் ஆதரவும் இருந்தது தான்.

அமெரிக்கத் தொழிலாளர் சந்தையில், சோர்வின் அறிகுறிகளைக் காட்டும் வகையிலான புதிய தரவுகள் வெளியானதைத் தொடர்ந்து, அமெரிக்க டாலர், தொடர்ந்து இரண்டாவது முறையாக பலவீனமடைந்தது.

வேலைவாய்ப்பு குறைவுக்கான இந்த சரிவு, பெடரல் ரிசர்வ் வங்கி, ஆண்டு முடிவதற்குள் மேலும் ஒரு வட்டி விகிதக் குறைப்பை வழங்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

டாலர் வேகம் இழந்ததால், ரூபாய்க்கு மிகவும் தேவையான நிம்மதி கிடைத்துள்ளது. இருப்பினும், இந்த நிம்மதி எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது உலகளாவிய இடர் உணர்வுகளைப் பொறுத்தது.

ரிசர்வ் வங்கி 88.80 என்ற அளவில் ரூபாயைப் பலமாகப் பாதுகாத்தது, ஒரு வலுவான எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. 88.50 - 88.60 என்ற ஆதரவு, ரூபாயை இப்போதைக்கு நிலையாக வைத்திருக்கிறது.

இந்தியா -- அமெரிக்கா வர்த்தகப் பேச்சுகளில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டால், அது உணர்வை உயர்த்தி, ரூபாயை 88.40-க்கு கீழே தள்ளக்கூடும்.

இது 87.50 - 87.70 என்ற நிலையை நோக்கி வலுவடையச் செய்ய வழிவகுக்கும். அதாவது, ரூபாய் ஒரு புதிய பலத்திற்கான ஆயத்தத்தைத் தொடங்குகிறது என்பதை குறிப்பதாக இருக்கும்.


அமித் பபாரி,




நிர்வாக இயக்குநர்,




சி.ஆர்.போரக்ஸ் அட்வைசர்ஸ்

Advertisement