தேர்தல் முடிந்ததும் 'அந்த சார்' உள்ளே போவார்: நாகேந்திரன்
விருதுநகர்: ''அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான, ஞானசேகரன் சொன்ன, அந்த 'சார்', விரைவில் உள்ளே போவார்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன் கூறினார்.
அவர் நேற்று அளித்த பேட்டி:
எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணியை, தி.மு.க.,வினர் பெரிய விஷயமாக பேசுகின்றனர்.
வாக்காளர் பட்டியலில் இருந்து, இறந்தோர் பெயரை நீக்க வேண்டும்; அவ்வளவுதான். புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும். இதைப்பார்த்து ஏன் பயப்பட வேண்டும்?
சென்னை அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய, தி.மு.க., பிரமுகர் ஞானசேகரன் சொன்ன சாரை விட, இந்த 'சார்' மோசமான சார் அல்ல.
ஞானசேகரன் சார், இப்ப சிறை உள்ளே இருக்காரு. அவர் வாஞ்சையோடு அழைத்த, 'அந்த சார்', இன்னும் வெளியே தான் இருக்கிறார். சட்டசபை தேர்தல் முடிந்ததும், அந்த குறிப்பிட்ட சாரும் உள்ளே போவது நிச்சயம்.
பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை ஏற்காமல், மத்திய அரசுடன் தமிழகம் தொடர்ந்து மல்லுகட்டுகிறது. மத்திய அரசுக்கு எதிராக வீர வசனம் பேசி, தி.மு.க.,வினர் காலம் கழிக்கின்றனர். இதனால், தமிழக மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு நாகேந்திரன் கூறினார்.
எஸ் ஐ ஆர்[SIR 2025] பற்றி இன்று சொல்வதற்கு பதிலாக, என் 23 வரட்டுமா இதை எய்யவில்லை என்று சொல்லுங்கள். இதில் 11 வருடம் உங்களுடையது. மேலும் அதை என் 2002 உடன் ஒத்துப்பார்க்க வேண்டும். போன தேர்தலில் இருந்ததை வைத்து செய்திருக்கலாமே. ஆனாலும் ஒரு நல்ல ஆரியம் - 1947 - இலிருந்து தொடங்கவில்லை.
இந்த எஸ் ஐ ஆர் வார்த்தை ஜாலத்தை விட்டுவிட்டு போய் வேலையைப் பாருங்கள்.
Rs 3,99,00,000மேலும்
-
தமிழகம் வரவேண்டிய முதலீடு ஆந்திரா சென்றது; 'ஷாக்' கொடுத்த தென்கொரிய நிறுவனம்
-
மூன்றாண்டாக கோவில் வளாகத்தில் நடத்தப்படும் அரசு பள்ளி வகுப்புகள்!
-
உ.பி.,யில் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விபத்து: மாயமான 15 பேரை தேடும் பணி தீவிரம்
-
காசா விவகாரம்: அமெரிக்காவுக்கு போட்டியாக ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவும் தீர்மானம்
-
உச்சம் தொட்ட விலைவாசி உயர்வு; உணவு பொருட்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்தார் அதிபர் டிரம்ப்
-
ஜம்மு-காஷ்மீரில் சோகம்: கார்-லாரி மோதியதில் 5 பேர் பரிதாப பலி