பீஹாரில் ரூ.10 ஆயிரம் கொடுத்தது போல தமிழகத்திலும் தர வாய்ப்பு: சீமான்
சென்னை: பீஹாரில் ரூ.10 ஆயிரம் கொடுத்து மோடி வெற்றி பெற்று விட்டார். தமிழகத்திலும் அதுபோன்று ரூ.15 ஆயிரம் கொடுக்க வாய்ப்பு உள்ளது. அம்மாக்களிடம் எல்லாம் வங்கியில் கணக்கு ஆரம்பித்து வைத்துக் கொள் என்று சொல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் சீமான் கூறியதாவது: தமிழகத்தில் பல காலமாக போலி வாக்காளர்கள் உள்ளனர். ஏதோ இப்போது மட்டும் போலி வாக்காளர்கள் உள்ளதுபோல் எஸ்ஐஆர் பணிகளை செய்வது ஏன்? பீஹாரை போல் தமிழகத்திலும் தங்களுக்கு வாக்களிக்காத ஓட்டுகளை நீக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு வீட்டின் வரவேற்பரையில் என் படம் இருந்தால் அந்த வீட்டில் இருக்குமா?
இதேபோல் தம்பி விஜய்யின் படம் இருந்தாலும் அந்த வீட்டில் ஓட்டு இருக்காது. நீக்கி விடுவார்கள். எஸ்ஐஆர் பணிகளுகாக திமுகவினர் உடன் செல்லும்போது ஒரு வீட்டில் ஜெயலலிதா படமோ அல்லது எடப்பாடி பழனிசாமி படமோ இருந்தால் அங்கும் ஓட்டு இருக்குமா? பாஜக செல்லும்போது இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வீட்டில் அவர்களுக்கு ஓட்டு இருக்குமா? இப்பொழுது பிரதமர் மோடி பீஹாரில் ரூ.10,000 போட்டார் இல்லையா?
நம்மாள் ரூ.15,000 கூட போடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதனால் நமது அம்மாக்களிடம் எல்லாம் வங்கியில் கணக்கு ஆரம்பித்து வைத்துக் கொள் என்று சொல்ல வேண்டும். பீஹார் பார்முலாவை பின்பற்றி, அவர்களை ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு கொடுக்க வேண்டியதுதானே? ஏற்கனவே 10 லட்சம் கோடி ரூபாய் கடன் உள்ளது. இன்னும் ஒரு ரெண்டு லட்சம் கோடியை கடனாக்கி விட்டு போக வேண்டியது தானே? இவ்வாறு சீமான் கூறினார்.
மிகத் தெளிவாக ஒன்று புரிகிறது. அண்ணன் எவ்வளவு தெளிவாக வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.கவிற்கு வாக்கு கேட்கிறார் பாருங்கள் ? பீகாரில் பத்தாயிரம் இங்கு , பதினைந்தாயிரம் தி.மு.க அரசு தரப் போகிறது தயாராக இருங்க என ஆளுங்கட்சிக்கு பதிலா இவர் தெளிவாக ஹாஹ் ஹா என சிரித்துக் கொண்டே தி.மு.கவிற்கு மறைமுகமாக வாக்கு கேட்கிறார்? அண்ணே நீங்க இந்த அளவுக்கு மாறுவீங்கன்னு சத்தியமா நினைக்கல அண்ணே? தமிழில் வஞ்சப் புகழ்ச்சி அணி என ஒன்று உண்டு மற்றவரை இகழ்வது போல் புகழ்வது, புகழ்வது போல் இகழ்வது. அண்ணன் இப்ப தி.மு.க அரசை இகழ்வது போல் பாருங்கள் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ பதினைந்தாயிரம் வரப் போகிறது எனப் புகழ்கிறார்! நாளையே பாருங்கள் நமது வங்கி கணக்கில் பதினைந்தாயிரம் தமிழக அரசு போடப் போகிறதாமே என மக்கள் பேசப் போவதை!
பணம் கொடுத்தால் தான் தமிழன் ஓட்டு போடுகிறான் ... பணம் இல்லாமல் எப்படி கட்சி, தேர்தல் , வெற்றி??? எதார்த்த கள நிலவரம் நன்றாக தெரிந்தும் சும்மா வாயில வட சுட வேண்டியது ... ஆமா இவர் எந்த தொழில் செய்த வருமானத்தில் கார் வாங்கினார்?
மக்களையும் முட்டாள்களாக ஆக்குகிறார்கள்
தமிழக பெண்களை காசுக்கு ஓட்டு போடுபவர்கள் என்று கேவலமாக பேசும் சீமானுக்கு தமிழக பெண்கள் தேர்தலில் தக்க பாடம் புகட்டுவார்கள்.
கூத்தாடி படத்தை நடுவீட்டில் வைப்பவன் நிச்சயமாக கூறுகெட்டவனாகத்தான் இருக்க முடியும்.. அப்படிப்பட்ட ஆட்களுக்கு ஓட்டுரிமை என்பதே வேஸ்ட்....
வர வர இவர் மேலே உள்ள மரியாதை பொய் விட்டது
கூட்டி கழிச்சு பாருஙக உங்க்ளுக்கு எவ்வளவு தேறும் என்று.
திமுக மத்திய அரசின் பத்தாயிரத்தை தான் கொடுத்ததாக ஸ்டிக்கர் ஒட்டிவிடும். அதனால் தமிழகத்திற்க்கு நயாபைசா கிடையாது. மேலும் திமுக மாநில அரசின் வரிவருவாயிலிருந்து ஐந்தாயிரத்தை எடுத்துக்கொடுத்து ஓட்டுவாங்க திட்டமிட்டுள்ளது. இதனால் தமிழகம் திவாலாகிவிடும் அபாயம் உள்ளது. இது தேர்தல் ஆணையத்தால் தடுக்கப்படும். மேலும் மத்திய அரசு தமிழகத்திற்கு அடுத்த ஆறுமாதத்திற்கு அனைத்துநிதிகளையும் நிறுத்தவேண்டும். இல்லையெனில் அந்த வளர்ச்சிக்கான நிதியை இலவசமாக கொடுத்து, திமுக ஓட்டுவாங்க முற்படும்.
தீ மூ கா வின் பீ டீம்...தேர்தல் நேரம்...பெட்டிகள் கை மாறும் நேரம் நெருங்கிவிட்டது போல...
திரு சீமான் அவர்களே நடந்து முடிந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் எங்களுக்கு வாக்கு அளிக்க முடியவில்லை என்று எத்தனை பேர் புகார் கொடுத்திருக்கிறார்கள். என் வீட்டில் ராகுல் படம் இருந்ததால் என் வாக்குரிமையை பறித்து விட்டார்கள் என்று எத்தனை பேர் புகார் கொடுத்திருக்கிறார்கள். என் வீட்டில் லால்பிரசாத் தேஜஸ்வியாகவும் படம் இருந்ததால் எங்களுக்கு வாக்குரிமை கொடுக்க மறுத்துவிட்டார்கள் என்று எத்தனை பேர் புகார் கொடுத்திருக்கிறார்கள். எங்கள் வாக்கை திருடிவிட்டார்கள் என்று எத்தனை பேர் புகார் கொடுத்திருக்கிறார்கள் கொஞ்சம் சொல்ல முடியுமா சீமான் அவர்களே.மேலும்
-
கோவை பயணம் குறித்து பிரதமர் மோடி தமிழில் பதிவு
-
தமிழகத்தில் இந்தாண்டு ரேபிஸ் தாக்குதலுக்கு 28 பேர் பலி: நாய்க்கடியால் 5.25 லட்சம் பேர் பாதிப்பு
-
ஈமச்சடங்கு பணம் வழங்க லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
-
பெங்களூரு கடலைத் திருவிழா
-
ஏஐ தொழில்நுட்பத்தை கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்: கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை அட்வைஸ்
-
எக்ஸ் சமூக வலைதளம், ஓபன் ஏஐ முடக்கம்: நெட்டிசன்கள் அவதி