ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் என்பது இனி கட்டாயம்; பிரதமர் மோடி
ஜோகன்னஸ்பர்க்: ஐ.நா.,வில் சீர்திருத்தங்கள் என்பது இனி கட்டாயம் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது;
உலக நாடுகள் மத்தியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒருங்கிணைப்பு என்பது தேவை. இங்கு பயங்கரவாதத்தை எதிர்த்து செயல்படுவதில் இரட்டை நிலைப்பாடு என்பதற்கு இடமே இல்லை.
இந்த கூட்டம் 3 நாடுகளின் குழுக்கள் கூட்டம் அல்ல. மாறாக, 3 பெரிய ஜனநாயக நாடுகள் மற்றும் 3 பெரிய பொருளாதாரங்களை இணைக்கும் ஒரு முக்கிய தளம். நம் ஒவ்வொருவரின் முன்னேற்றத்தை நாம் பாராட்டிக் கொள்ளலாம். இது வளர்ச்சிக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறும்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் என்பது இனிமேல் ஒரு விருப்பம் அல்ல, மாறாக அது கட்டாயம். கல்வி, சுகாதாரம், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், சூரிய ஒளிசக்தி போன்ற துறைகளில் 40 நாடுகளின் திட்டங்களில் இந்தியா, பிரேசில், தென் ஆப்ரிக்கா நாடுகளின் பணி பாராட்டத்தக்கது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
ஒத்த கருத்துடைய நாடுகளை இணைத்து தற்போது உள்ள ஐ.நா வை செல்லா காசு ஆக்கிவிட்டு புதிய கவுன்சில் ஆரம்பிக்க வேண்டும்.
ஐ நா சபை பிரயோஜனம் இல்லாமல் போய் வெகு காலம் ஆகிவிட்டது. செயல் பட முடியாத அமைப்பு பற்றி பேசுவதில் பயன் இல்லைமேலும்
-
திடீரென நின்று போன ஸ்மிருதி மந்தனாவின் திருமணம்; உறவினர்கள் அதிர்ச்சி
-
பீஹாரில் தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிப்பு; ஆய்வாளர்கள் அதிர்ச்சி
-
தென் ஆப்ரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
-
37 ஆண்டுகள் முன்பு காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவிய எஸ்ஐஆர்! இது மேற்குவங்க அதிசயம்
-
சிந்து பகுதி இந்தியாவுக்கு சொந்தமாகலாம்: ராஜ்நாத் சிங் பேச்சு
-
கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வெற்றி செல்லாது என அறிவிப்பீர்களா? சீமான் கேள்வி