தென் ஆப்ரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
மும்பை: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்ரிக்க அணி, டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்டிலும் அந்த அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் நவ.,30ம் தேதி தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில், தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரிஷப் பன்ட், ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். கேப்டன் கில் கழுத்து வலி காரணமாக விலகிய நிலையில், கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
அணி விபரம்;
கேஎல் ராகுல் (கேப்டன்)
ரோகித் ஷர்மா
விராட் கோலி
ஜெய்ஸ்வால்
திலக் வர்மா
ரிஷப் பன்ட்
வாஷிங்டன் சுந்தர்
ரவீந்திர ஜடேஜா
குல்தீப் யாதவ்
நிதிஷ்குமார் ரெட்டி
ஹர்ஷித் ரானா
ருதுராஜ் கெயிக்வாட்
பிரசித் கிருஷ்ணா
அர்ஷ்தீப் சிங்
துருவ் ஜூரேல்
இதில் பாதி முதியவர்கள். அனுபவம் இல்லாத இளம் தென் ஆப்பிரிக்க அணியுடன் இந்திய பிச்சில் இவர்கள் கூடை கூடையாய் ரன் எடுத்து இன்னும் 10 ஆண்டுகள் விளையாடி இளைஞர்களுக்கும் வழி விடாமல் அவர்களையும் கிழவர்கள் ஆக்கி விடுவார்கள். இந்திய கிரிக்கெட் சங்கத்தை மத்திய அரசு உடன் மாற்ற வேண்டும். அப்போதுதான் விருப்பு வெறுப்பற்ற வீரர்கள் தேர்வு நடக்கும்.மேலும்
-
ரூ.262 கோடி போதைப்பொருள் பறிமுதல்; அதிகாரிகளுக்கு அமித்ஷா பாராட்டு
-
துபாயில் உயிரிழந்த தேஜஸ் விமானிக்கு ரஷ்யா, அமெரிக்கா விமானப்படை அஞ்சலி
-
பஹ்ரைன்-ஹைதராபாத் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; மும்பை விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம்
-
அதிகாரத்தில் இருப்பவர்களுக்காக தியாகம் செய்யயப்படும் ஜனநாயகம்: ராகுல் குற்றச்சாட்டு
-
திடீரென நின்று போன ஸ்மிருதி மந்தனாவின் திருமணம்; உறவினர்கள் அதிர்ச்சி
-
பீஹாரில் தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிப்பு; ஆய்வாளர்கள் அதிர்ச்சி