ஆதாரம் இல்லை; ஆனால் நடந்தது மோசடிதான்: சொல்கிறார் பிரசாந்த் கிஷோர்
பாட்னா: பீஹார் தேர்தலில் மோசடி நடந்துள்ளது. ஆனால் தன்னிடம் எந்த ஆதாரமும் இல்லை என தேர்தல் வியூக வகுப்பாளரும், ஜன்சுராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, பிரசாந்த் கிஷோர் கூறியதாவது: பீஹார் தேர்தல் ஓட்டுப்பதிவில் மோசடி நடந்துள்ளது. இருப்பினும் அந்த குற்றச்சாட்டை நிரூபிக்க எந்த ஆதாரமும் தன்னிடம் இல்லை. தனது ஜன் சுராஜ் கட்சியின் தோல்வி அதிர்ச்சிகரமானது. ஜன் சுராஜ் கட்சி பிரசார களத்தில் மக்களின் கவனத்தை ஈர்த்தது. நாங்கள் சேகரித்த ஓட்டிற்கும், தேர்தல் முடிவுக்கும் சம்பந்தமில்லாமல் உள்ளது. ஏதோ தவறு நடந்துள்ளது.
தேர்தல் முடிவை மாற்றுவதற்காக, பீஹாரில் ஆயிரக்கணக்கான பெண் வாக்காளர்களுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி பணம் விநியோகித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து ஓட்டுப்பதிவு நாள் வரை, பெண்களுக்கு ஆரம்ப தவணையாக ரூ.10,000 வழங்கப்பட்டது. தேஜ கூட்டணி மற்றும் முதல்வர் நிதிஷ் குமாருக்கு ஓட்டளித்தால் கூடுதலாக ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.
இந்தியாவின் வேறு எங்கும் இந்த அளவுக்கு பணம் விநியோகித்த ஒரு அரசை நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. லாலு பிரசாத் யாதவின் காட்டு ராஜ்ஜியம் குறித்த நீடித்த பயம் காரணமாக தேஜ கூட்டணிக்கு மக்கள் ஓட்டளித்து விட்டனர். பல வாக்காளர்கள் தனது கட்சி வெற்றி பெற வாய்ப்பில்லை என்று கருதினர். தனது கட்சிக்கு ஓட்டளிப்பது தான் காரணமாக, லாலுவின் ஆட்சி மீண்டும் வருவதற்கு உதவும் என்று அஞ்சினர். இதனால் ஜன் சுராஜ் கட்சிக்கு மக்கள் பெரிதளவு ஆதரவு தரவில்லை. தனது அரசியல் வாழ்க்கை முடிந்து விடவில்லை. இவ்வாறு பிரசாந்த் கிஷோர் கூறினார்.
தேர்தல் வியூகம் செய்து பல மாநிலங்களில் பாஜ கட்சியையும் சேர்த்து பணம் வாங்கி வெற்றி பெற வைத்தவர் ஏன் தனக்கு தானே சூன்யம் வைத்து அவஸ்தை பட வேண்டும். உன்னை உபயோகித்துக் கொண்ட கட்சிகள் அனுபவமுள்ள அரசியல்வாதிகள். ஆலோசனைக்கு மட்டும் தான் உன் அறிவு. அறிவு அனுபவமாக ஆனது. உனக்கு
ஏற்பட்ட சறுக்கலில் இருந்து மீள்வது கானல் நீர் தான். கவலை படாதே. காலம் கட்டாயம் உனக்கு உணர்த்தும்.
அடுத்த பப்பு. தோல்விக்கு காரணம் தேடுகிறது இந்த கூட்டம்.
இவரை போன்றவரை நிபுணர் என்று சொன்னால் உண்மையான நிபுணரை என்னவென்று சொல்லுவோம்...? இப்படிப்பட்ட போலி நிபுணர்கள் வாயில் இருந்து வருவது அனைத்துமே பிதற்றல், உளறல் இட்டு கட்டிய பொய்கள். அடுத்த பீகார் தேர்தலில் இவரின் கட்சியை கூண்டடோடு ஒழிக்க வேண்டும்.
குப்புற விழுந்தப்புறம் என்ன பேச்சு இது? தேர்தலில் தோற்றவுடன் ராகுல் மாதிரியே பேசுகிறார்.. மக்களுக்கு இது பிடிக்காது என்பது கூட இவருக்குப் புரியவில்லையா.. இப்படி இருந்தால் தோல்வியும் விரக்தியும் மட்டுமே மிஞ்சும்.
சர்க்காரியா தீர்ப்பு போல பேசுகிறார். தெட்சிணாமூர்த்திலு சர்க்கரை திருடி ஊழல் செய்தது உண்மை. ஆனால் நிரூபிக்க முடியவில்லை..
Having got defeated Prasant Kishore become mad and that is why he blabbering. No political party give respect to him or his statements.
போப்பா பீகார் வடிவேல்
நிதிஷ் மோடி வெற்றியை பொறுத்து கொள்ள முடியவில்லை என நேரடியாக சொல்லவேண்டியது தானே
ஆதாரம் தர இயலாத குற்றச்சாட்டின் பெயர் அவதூறு...இவர் சிறைக்கு செல்ல வேண்டும் அல்லது மனநோய் விடுதிக்கு போக வேண்டும்....இவரும் ஜார்ஜ் சோரஸின் சம்பள பட்டியலில் உள்ளவர் போல...
தூக்கி உள்ள போடனும் இந்த அவதூறு ஜோக்கரை
இவர் எல்லாம் ஒரு தேர்தல் வியூக நிபுணர்! 200 கோடி இவருக்கு கொடுத்து சென்ற முறை திமுக எப்படி ஜெயித்தது என்பதற்கு இவரிடம் ஆதாரம் இருக்குதா?மேலும்
-
திடீரென நின்று போன ஸ்மிருதி மந்தனாவின் திருமணம்; உறவினர்கள் அதிர்ச்சி
-
பீஹாரில் தாய்ப்பாலில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிப்பு; ஆய்வாளர்கள் அதிர்ச்சி
-
தென் ஆப்ரிக்கா ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு
-
37 ஆண்டுகள் முன்பு காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவிய எஸ்ஐஆர்! இது மேற்குவங்க அதிசயம்
-
சிந்து பகுதி இந்தியாவுக்கு சொந்தமாகலாம்: ராஜ்நாத் சிங் பேச்சு
-
கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வெற்றி செல்லாது என அறிவிப்பீர்களா? சீமான் கேள்வி