கர்ப்பிணிக்கு வீட்டிலே பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்
வடமதுரை: அய்யலுார் பூசாரிபட்டியை சேர்ந்த வெள்ளையம்மாளுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் 3வதாக நிறைமாத கர்ப்பமாக இருந்தார்.
அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு அழைப்பு வர வடமதுரை பகுதி 108 ஆம்புலன்ஸ் டிரைவர் கனகுபாண்டி, மருத்துவ உதவியாளர் பிரதீபா பூசாரிபட்டி சென்றனர். ஆம்புலன்சில் ஏறுவதற்கு முன்பே வெள்ளையம்மாளுக்கு பிரசவ வலி அதிகமானது.
இதனால் மருத்துவ உதவியாளர் பிரதீபா தானே பிரசவம் பார்த்து தாய், சேயை காப்பாற்றினார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தொடர் கண்காணிப்பு மருத்துவ சிகிச்சைக்காக அய்யலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து பயணிகள் 10 பேர் பலியான சோகம்
-
கலிபோர்னியாவை புரட்டிப்போடும் கிறிஸ்துமஸ் புயல்: வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்
-
போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க தூதர்களுடன் ஜெலன்ஸ்கி பேச்சு
-
ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு
-
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை மாற்றி ஈ.வெ.ரா., பெயரை சூட்டுவதா: நாம் தமிழர் கட்சியினர் ஆவேசம்
-
கனடாவில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்; இந்திய மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை
Advertisement
Advertisement