வள்ளல் தகடூர் அதியமான் பெயரை மாற்றி ஈ.வெ.ரா., பெயரை சூட்டுவதா: நாம் தமிழர் கட்சியினர் ஆவேசம்
நமது நிருபர்
ஏற்காடு செல்லும் மலைப்பாதை வளைவுக்கு ஈ.வெ.ரா., பெயர் சூட்டியதற்கு கண்டனம் தெரிவித்த நாம் தமிழர் கட்சியினர், அந்த இடத்தில் தகடூர் அதியமான் வளைவு என பிளக்ஸ் ஒட்டினர்.
சேலத்திலிருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மொத்தம் 20 கொண்டை ஊசி வளைவுகள் (hairpin bends) உள்ளன. இந்த வளைவுகள் மிகவும் செங்குத்தானவை. ஒவ்வொரு வளைவுக்கும் பண்டைய கால மன்னர்களின் புகழைப் போற்றும் வகையில், அவர்களது பெயர்கள் வைக்கப்பட்டு உள்ளன. அந்தவகையில், 8வது கொண்டை ஊசி வளைவிற்கு தகடூர் அதியமான் வளைவு என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது.
கடந்த கோடை விழாவின் போது சாலையை புதுப்பிக்கும் பொழுது எட்டாவது கொண்டை ஊசி வளைவிற்கு ஈவெரா பெயரை நெடுஞ்சாலை துறையினர் வைத்துவிட்டனர். இதற்கு நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த வளைவில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் ஈவெரா என்ற பெயரை அழித்து விட்டு, அதன் மீது, கருப்பு பெயின்ட் அடித்து, 'தகடூர் அதியமான்' வளைவு என, பிளக்ஸ் ஒட்டினர். போராட்டம் நடத்தி விட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து, நாம் தமிழர் கட்சியினர் கூறியதாவது: 8வது வளைவுக்கு, 'தகடூர் அதியமான்' என பெயர் வைக்கப்பட்டிருந்தது. கடந்த கோடை விழாவின்போது நெடுஞ்சாலைத்துறையினர் திட்டமிட்டு ஈவெரா பெயரை வைத்துவிட்டனர். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வளைவிற்கு, 'தகடூர் அதியமான் பெயர் தான் இருக்க வேண்டும், என்றனர்.
ஈவெரா பெயரை அழித்த நாம் தமிழர் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஏற்காடு திராவிடர் விடுதலை கழகத்தினர், போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். நெடுஞ்சாலை துறையினர், நா.த.க.,வினர் மீது நடவடிக்கை கோரி
ஏற்காடு போலீசில் புகார் கொடுத்தனர். அதன்படி 13 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு சுதந்திரமே வேண்டாம் என்றவர், ஜின்னாவுடன் நெருக்கமாக இருந்து பாகிஸ்தானுடன் சேர்த்து திராவிட தனி நாடு கேட்டவர் அதற்காக ஜின்னாவை சிபாரிசு செய்யச் சொன்னவர் கன்னடர் ஈ.வே. ராமசாமி. இவருடைய பெயர் இங்கு சுதந்திர இந்தியாவில் தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது. தங்களது உதிரத்தை சிந்தி சுதந்திரத்திற்காகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்கள் வ.உ.சி., பாரதியார், சுப்ரமணிய சிவா, காமராஜர் இன்னும் எண்ணிலடங்காதோர் இங்கு தொடர்ந்து புறக்கணிக்கப் படுகின்றனர். திராவிடம் என்ற போர்வையில் தெலுங்கர்கள் தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் வரை இங்கு ராமசாமியும், கருணாநிதியும் மட்டும்தான் கொண்டாடப் படுவார்கள்.
தமிழை தூற்றியவரை, இந்துக்களை அசிங்கமாக பேசியவரின் அடையாளங்களை அழிக்காமல், ஏன் அவரைஅரசு தூக்கி பிடிக்கிறது? கொடுமை.
பெரியார் பெயரில் உள்ள அனைத்தும் தமிழக அரசின் என்று மாற்றப்பட வேண்டும் .பெரியார் சிலைகள் நீக்கப்பட்ட அதில் மழை நீர் சேகரிக்க வழி செய்ய வேண்டும் .
தனது உயிரை நீடிக்க கிடைத்த நெல்லி கனியை, தமிழ் மொழி வாழ ஒவையாருக்கு கொடுத்த அதியமான் எங்கே? தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று சமஸ்க்ருத மொழியில் சொன்ன - பாஷை நபர் எங்கே?? இங்கே எல்லாமே கோணமாணல் தான் போல..
தமிழகத்தின் பெருமையை உலகிற்கு எடுத்துக் கூறிய மாமன்னர்கள், சுதந்திரத்திற்கு பாடுபட்டு சொத்து சுகங்கள் இழந்து உயிர் நீத்த தியாகிகள் பெயரை எல்லாம் விட்டு விட்டு, தனது குடும்பத்திற்கு மட்டுமே உழைத்து பாடுபட்டு கோடிக்கணக்கில் சொத்துகள் சேர்த்த சுயநலத் தலைவன் பெயரை தமிழகத்தில் உள்ள எல்லா பேருந்து நிலையங்களுக்கும் வைப்பதையே குறிக்கோளாக கொண்ட திராவிஷ கட்சிக்கு தமிழகத்தின் பெயரையே கலைஞர் மாநிலம் என்று மாற்றினாலும் ஆசை அடங்காது.
ஒரு நெல்லிக்கனி கூட பெறாத விஷயம்! தாடிக்காரர் வெங்காயம் கூட யாருக்கும் கொடுத்ததில்லை!
தமிழ் நாட்டின் சாபக்கேடு இந்த பெரியார். தமிழை காட்டு மிராண்டி மொழி என்று சொன்ன இவர எப்படி ஹிந்து விரோத கும்பல் போற்றுகிறது. கேடு கேட்ட கும்பல். 2026 ஒன்று தான் வழி. ஹிந்துக்கள் விலை போகாமல் வாக்கு அளித்து, இந்த கோஷ்டியை அடித்து விரட்ட வேண்டும்.
இந்த திருட்டு திமுக கும்பல் தமிழர்களை, அவர்களின் அடையாளங்களை அழிக்காமல் விடமாட்டார்கள் .. தமிழர்களை காட்டுமிராண்டி கும்பல் என்ற அந்த தமிழர் எதிரி ராமசாமியின் பெயரை வைப்பது கேவலம் ...
எப்படி உடனே வழக்கு பதியப்படுகிறது வெங்காயம், விடியலின் மகன் சித்து விளையாட்டில் இதுவும் ஒன்று, கொத்தடிமை அமைச்சர்கள் கூட்டம் விடியலின் மகனை தலையில் வைத்து கூத்தாடுகின்றனர், என்று திருந்தும் இந்த திருட்டு அடிமை கூட்டம்
1973 ஆம் ஆண்டு பெரியார் மறைந்தார் . 52 ஆண்டுகள் கடந்த பிறகும் அவரை ஆதரிப்பவர்களை விட எதிர்ப்பவர்கள் மத்தியில் இன்னும் உயிர்ப்புடன் இருப்பது நன்றாக தெரிகிறது.
தமிழ்நாட்டில் தமிழர்களை விரட்டி அவர்களை அகதிகளாக்கும் வரை நாம் பெரியாரை போற்ற வேண்டும்.
யாரும் புகழ் பாடி போற்றவில்லை..மேலும்
-
ஆந்திராவில் அதிகாலை பயணத்தால் சோகம்: பஸ் மீது கார் மோதியதில் 4 பேர் பலி
-
2026ம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: ஜனவரி 20ல் கூடுகிறது தமிழக சட்டசபை
-
அரசின் சீர்திருத்த நடவடிக்கைகள் தொடரும்: பிரதமர் மோடி உறுதி
-
மயிலாடுதுறையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து
-
பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி... 24 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவின் குரலாக ஒலித்த புடின்!
-
இந்தியாவுடன் கருத்து வேறுபாட்டை உருவாக்க முயற்சி; அமெரிக்கா மீது சீனா குற்றச்சாட்டு