'தி.மு.க.,வை வீழ்த்துவதே ஒற்றை இலக்கு'; அண்ணாமலை பேட்டி
கோவை: ''தி.மு.க., வை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் ஒற்றை இலக்கு,'' என, பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., சார்பில் நடந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 101 வது பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரது வாழ்க்கை மற்றும் ஆட்சியின் சாதனைகள் குறித்த கருத்தரங்கு, கோவை நவஇந்தியா எஸ்.என்.ஆர்., அரங்கில் நேற்று நடந்தது.
கோவை மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பா.ஜ., முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை சமூகப்பணியில் சிறந்து விளங்கியவர்களுக்கு, நல்லாட்சி விருதுகளை வழங்கி பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அண்மை காலமாக அரசு பஸ்கள் விபத்திற்கு உள்ளாகின்றன. அரசு பஸ்களை சோதித்து தரசான்று வழங்க வேண்டும். தமிழக தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி இருக்கும் என்பது பின்னால் தான் தெரியும். அனைவரும் நல்ல முடிவெடுப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் வெற்றியை பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை பார்த்து வருகிறோம்.
தி.மு.க., ஆட்சி முடியும் நேரத்தில் உள்ளது. அவர்கள் இன்னும், 100 நாட்கள் தான் ஆட்சியில் இருப்பார்கள். அனைத்து மத பண்டிக்கைக்கும் பிரதமர் வாழ்த்து கூறுகிறார். ஆனால், முதல்வர் கிறிஸ்துவர், முஸ்லிம் பண்டிகைகளுக்கு மட்டுமே வாழ்த்து கூறுகிறார். இதில் இருந்து மத அரசியல் செய்வது யார் என்பது தெரியும்.
யார் என்ன அரசியல் செய்கின்றனர் என, தமிழக மக்களுக்கு தெரியும். தி.மு.க., வை வீழ்த்த வேண்டும் என்பதே எங்கள் ஒற்றை இலக்கு. பா.ஜ., பூத் கமிட்டியை வலிமைப்படுத்தி உள்ளோம். போலீசார், மிகப்பெரிய மனஉளைச்சலில் உள்ளனர். அந்த துறையிலும் சில கருப்பு ஆடுகள் உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.
வணக்கம். திமுக ஆட்சியை தோற்க்கடிகக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, அதிமுகவிடம் வெறும் 30 சீட் வாங்க போறீங்களா ?
அண்ணா! தி.மு.க வை வீழ்த்துவதே எங்கள் ஒற்றை இலக்குங்கன்னா ? ஆனா அது எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் ஆக்குறதுக்கு இல்லிங்கன்னா !
ப ஜா க வை இங்கே வலுப்படுத்தாமல் கூட்டணி அமைக்க அடுத்த கட்சிக்காரனை இங்கு நம்பி இருக்க முடியாது. கட்சியை வலுப்படுத்த வந்த அண்ணாமலையையும் ஓட ஓட விரட்டி விட்டார்கள் ...இனி தமிழ் நாட்டில் ப ஜா க வை மட்டும் நம்பி இருக்காமல் இங்குள்ள ஹிந்து முன்னணி மற்ற இந்து மத இயக்கங்களுக்கு ஆதரவு கொடுப்போம் ...அரசியல் சூழ்ச்சி இல்லாமல் இயக்கங்கள்தான் வலுவாக களத்தில் நிற்க முடியும் ..
திமுகவை வீழ்த்த இப்போது எடுத்துள்ள பிரச்சாரம் எடுபடாது மக்களிடையே என்பதை எவரிடம் சொல்லி அழுவது? எம் ஜி யார் எப்படி வெற்றிபெற்றார் என்பதை யோசியுங்கள். அம்மா ஜெ அவர்களின் ஒவ்வோர் வெற்றியும் சும்மா வந்துவிடவில்லை. இப்போது கூட திமுகவின் ஊழல்களை மட்டுமே எடுத்துச் சொன்னால் போதும் எடுத்துகொள்ளும் கட்சியின் வெற்றி மகத்தானதாக இருக்கும் என்பதை உறுதிபட சொல்லலாம். ஒவ்வோர் ஊழலும் மக்களை வெகுவாக சென்றடையும் பட்சத்தில் திமுகவின் தோல்வி உறுதி. எவ்வளவு ஊழல்களை எடுத்து சொல்லலாம் அதை விடுத்து வேறு செய்திகளை சொல்லி சொல்லி மக்களிடையே ஒருவித வெறுப்பையே எதிர்க்கட்சிகள் அடைகின்றன. ஊழலை சொல்லி சொல்லியே அவர்களை தொடர்ந்து கூப்பிலே வைக்க முடிந்தது. மக்களிடையே பரபரப்பாக பேசக்கூடிய செய்தியே பிறரிடம் சேர்த்த சொத்துக்களை பற்றித்தான் இருக்கும். ஒவ்வோர் முறையும் திமுக அப்படி பேசவே விடாமல் வேறு செய்திகளை பேசவைத்துவிடுகின்றது. அண்ணாமலையின் வெற்றியே அவர் கொண்டுவந்த ஊழல் பட்டியலால்தான் என்பதை அவரே மறந்துவிட்டார் என்றுதான் தோன்றுகின்றது. ஊழலை விரிவாக எடுத்து சொல்லுங்கள் மக்களிடையே பேசு பொருளாக மாற்றுங்கள் பின்னர் வெற்றியை பாருங்கள். உச்சத்தை தொடுகின்ற வெற்றியை பாஜக கூட்டணி பெற்றிடும்
பிஜேபி சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் மாநில செல்வாக்கு இல்லாத எடப்பாடி, பன்னீர், சசி கோஷ்டிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த விளைவு. மாநில தேர்தலுக்கு முன் பிஜேபி 4 பகுதியாக பிரித்து தன் கட்சி பிரமுகருக்கு பொறுப்பு கொடுக்க வேண்டும். கோவை சுற்றி அண்ணாமலை, மதுரை நாகேந்திரன், திருச்சி வன்னியர் ஒருவர், சென்னை தலித் ஒருவர். எடப்பாடி கட்டுக்குள் வரவில்லை என்றால், அவரை வெளியேற்ற வேண்டும். அதிகம் சிறுபான்மை ஓட்டு பிஜேபிக்கு இங்கு வராது. தன்னுடன் கூட்டணி வைக்கும் கட்சி, செல்வாக்கு மிகுந்த சுயேட்சை வாய்ப்பு பெற வேண்டும். நிச்சயமாக தனி பெரும்பான்மை எந்த கட்சிக்கும் வராது. பிஜேபி கீழ் ஆட்சி அமைக்க முடியும்.
ஐயம் சாரி.. வெயிட் அண்ட் watchமேலும்
-
மெக்சிகோவில் பஸ் கவிழ்ந்து பயணிகள் 10 பேர் பலியான சோகம்
-
கலிபோர்னியாவை புரட்டிப்போடும் கிறிஸ்துமஸ் புயல்: வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்கள்
-
போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க தூதர்களுடன் ஜெலன்ஸ்கி பேச்சு
-
ரயில் பயணியர் எண்ணிக்கை 7 மாதங்களில் 17 கோடி உயர்வு
-
வள்ளல் தகடூர் அதியமான் பெயரை மாற்றி ஈ.வெ.ரா., பெயரை சூட்டுவதா: நாம் தமிழர் கட்சியினர் ஆவேசம்
-
கனடாவில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்; இந்திய மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை