புழல் சிறையிலிருந்து சவுக்கு சங்கர் விடுதலை
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் நேற்று இடைக்கால ஜாமின் வழங்கிய நிலையில், பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் புழல் சிறையில் இருந்து இன்று (டிசம்பர் 27) விடுதலை செய்யப்பட்டார்.
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 13ம் தேதி போலீசார் அவரது வீட்டில் கைது செய்தனர். சென்னை நந்தனம் பகுதியில் ஹரிச்சந்திரன் என்ற பார் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமின் வழங்குமாறு, அவரது தாய் கமலா மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், பி.தனபால் ஆகியோர் அடங்கிய அமர்வு, 'நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. வசிக்கும் இடத்தை போலீசாருக்கு தெரிவித்து விசாரணைக்கு உதவ வேண்டும்' என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன், சவுக்கு சங்கருக்கு 2026ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி வரை இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இன்று சவுக்கு சங்கர் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
விளாசிய நீதிமன்றம்
நேற்றைய தீர்ப்பில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: நீங்கள் ஏன் பத்திரிகையாளர்களுக்கு பின்னால் ஓடுகிறீர்கள்? கருத்து வேறுபாடு என்பது ஒரு ஜனநாயக உரிமை. சட்டசபையில் கருத்து வேறுபாடு மதிக்கப்படுகிறது. கருத்து வேறுபாட்டை வெளிப்படுத்துபவர்கள் யாராவது துன்புறுத்தப்பட்டால், நீங்கள் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படுகிறீர்கள்.
தலையீடு
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நபர்களுக்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விரும்பினால், அவர்கள் அவதூறு வழக்கு மூலம் சிவில் நீதிமன்றத்தை அணுகி தடை உத்தரவை பெறலாம். அதற்கு உங்களை யாரும் தடுக்க முடியாது. தனி நபர் சுதந்திரம் என்ற விஷயத்தைத் தொட்டால் அது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கைகளில் தலையிடுவதாக அமையும்.
நீதிமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களைக் கவனத்தில் கொண்டும், சிறைக்கைதியின் மருத்துவ நிலை மற்றும் அவரது சுதந்திரம் மீண்டும் மீண்டும் கட்டுப்படுத்தப்படுவதையும் கருத்தில் கொண்டு ஜாமினில் விடுவிக்க தயாராக உள்ளது. 2026 மார்ச் 25 ம் தேதிக்கு முன்னர் அவர் அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும்.
மன உளைச்சல்
அதிகாரிகளின் நன்மதிப்பை இழந்த குறிப்பிட்ட நபர்களைக் குறிவைக்க சட்டத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. தனிநபருக்கு எதிராக தொடர்ச்சியாகக் காட்டப்படும் கடுமையான நடவடிக்கைகள், நாட்டின் குடிமக்களுக்கு சரியான செய்தியை அனுப்பாது. அதிகாரிகளின் துஷ்பிரயோகம் மூலம் சவுக்கு சங்கரை துன்புறுத்தியது மட்டுமல்லாமல், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி உள்ளனர். அனைத்து காரணிகையும் கருத்தில் கொண்டு சவுக்கு சங்கர் நாட்டை விட்டு வெளியேறக்கூடாது. சாட்சிகளுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையின்பேரில் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
தமிழ்நாட்டில் இருப்பது அரசாங்கம் அல்ல , பொரிக்கி தனத்தை வாடிக்கையாக கொண்டுள்ள தலைமை
போலீஸ் துறையை முதலமைச்சரின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கி , எலெக்ஷன் கமிசின் போல் தன்னாட்சி அமைப்பாக மாற்றவேண்டும்
A strong law is needed to punish the police Dept if they arrest the common people with a false reason. If the mistake is proved the law must punish very hard the policemen including IPS example: terminating from the police job totally.
Nee parthiya
துஷ்பிரயோகம் மூலம் சவுக்கு சங்கரை துன்புறுத்திய அதிகாரிகளையும் மந்திரிகளையும் தண்டிக்க சட்டத்தில் இடமில்லையா..? அந்தமாதிரி துஷ்பிரயோக நபர்களுக்கு தண்டனை கொடுத்தால் தான் ஆட்சியாளர்கள் ஏவலுக்கு அடிபணியும் அதிகாரிகளுக்கு பயம் வரும்.
சங்கர் என்ற தைரியமான பத்திரிக்கையாளர் இருப்பதால்தான் ஓரளவாவது திமுக அடக்கி வாசிக்கிறது...
இந்த மாதிரி கேவலப்படுத்தபட்டு அரசாங்கம் எங்காவது இருக்கா. வன்முறை கலாச்சாரத்தை அரசாங்கம் கையிலே எடுத்த மாதிரி உள்ளது.
நாலு சிறையிலிருந்து வந்தால் என்ன வராவிட்டால் என்ன. பிளாக் மெயில் செய்து எல்லோரிடமும் கோடிக்கணக்கில் பணம் பிடுங்கி ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருப்பவன்.
இது உண்மையா? யாரிடமிருந்து இந்த ஆளு எவ்ளோ பணம் பிடுங்கிணான் ? ஏதாவது ஒரு நிகழ்வை தெரிவிக்கவும். உண்மையிலேயே இந்த ஆளு பணம் பறிக்குற கேஸா இருந்தான் என்றால் தீய முக களவாணிங்க பணத்தை அள்ளி வுட்டு இவன் வாயை அடைத்திருப்பான்களே? அந்த மாதிரி எதுவும் நடந்த மாதிரி நியூஸ் இல்லையே. எலன் மஸ்கை விட முகஸ் பெரிய பணக்காரன்.
அப்படி இருந்து இருந்தால் எப்பவோ மந்திரியாகி இருப்பாரே.
பெலிஃஸ் க்கு ஒரு நேர்காணல் கொடுத்து பேச போகிறார்
இவரை இப்படி வாட்டி வதைப்பது
ஒரு அரசுக்கு அழகல்ல.மேலும்
-
பாஜ, ஆர்எஸ்எஸ்க்கு திக்விஜய சிங் திடீர் பாராட்டு; காங்கிரஸ் தலைமை அதிருப்தி
-
என்னையும், விஜய்யையும் பாஜ பெற்றெடுத்த போது திருமாவளவன் தான் பிரசவம் பார்த்தாரா; சீமான் விமர்சனம்
-
கம்போடியா- தாய்லாந்து இடையே மீண்டும் போர் நிறுத்தம் அமல்: புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
-
என்னோடு நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? முதல்வருக்கு இபிஎஸ் சவால்
-
பட்டா மாறுதலுக்காக ரூ.6 ஆயிரம் லஞ்சம்: சிக்கினார் விஏஓ!
-
மேடையில் கண் கலங்கிய செங்கோட்டையன்